கம்பம் அருகே உள்ள சுருளி தீர்த்தத்தில் குள்ளபுரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு அன்பு அறம் செய் சுருளிப்பட்டி அன்பு ராஜா தனது அனுபவப் பாடத்தை கற்றுத் தந்தார்.
நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர் முனைவர். இணை பேராசிரியர் ஜெயலட்சுமி, உதவிப் பேராசிரியர் சரவணன், சுரேஷ், சோனியா கலந்துகொண்டு மாணவர்களுக்கான அனுபவ பாடத்தை கற்றுத் தந்தனர்.
பாடத்தில் கூறியது என். ஜி.ஓ.என்றால் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? பேரிடர் என்றால் என்ன? இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயல்பாடுகள் என்ன? மரம் வளர்ப்பதன் அவசியம் என்ன? ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பை தடுப்பது எப்படி என்ற பாடத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு மஞ்சப் பையான துணிப்பை வழங்கியும், இன்றைய சிறப்பு தினமான ஜூன் 28 உலக மரங்கள் தினத்தைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்து கூறி சுருளிப்பட்டியில் இயங்கி வரும் சங்கமம் அறக்கட்டளை பொதுமக்களுக்கான சேவையை எவ்வாறு செய்கிறது என்பதை வருகை புரிந்த 150 மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களின் கல்லூரி நோட்டில் எழுதப்பட்டது.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments