தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 2,78,825 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
தேனி பாராளுமன்ற தொகுதியில் தபால் ஓட்டுகள் மற்றும் பதிவான வாக்குகள் என மொத்தம் 11,41,219. இவை 23 சுற்றுகள் மூலம் எண்ணப்பட்டு முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
திமுக - 5,71,493
அதிமுக - 1,55,587
அமமுக - 2,92668
நாதக - 76,834
நோட்டா - 11,336
வித்தியாசம் - 2,78,825 வாக்குகள் எனவே 2,78,825 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், தேனி மாவட்ட கலெக்டருமான ஷஜீவனா வழங்கினார்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதனை அடுத்து தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உழைப்பை கண்டு செய்த திட்டங்கள் மற்றும் சாதனைகளுக்கு தமிழகம் முழுவதும் மக்கள் மாபெரும் வெற்றியை திமுக கூட்டணிக்கு அளித்துள்ளனர்.
தேனி தொகுதியில் நான் பெற்றுள்ள வாக்கு வித்தியாசம் ஏற்கனவே நாங்கள் எதிர்பார்த்தது தான். அதனால் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக-வின் கோட்டை என வரும் காலங்களிலும் நிரூபிப்போம்.
தேனி தொகுதியை பொறுத்த வரை திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் இடையே தான் போட்டி என நினைத்திருந்தோம். ஆனால் அமமுக தினகரன் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
அதுபோல அதிமுக-வின் பலவீனம் என்ன என்பது தெரியும். அதனால அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றார்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments