Skip to main content

Posts

எம்.பி., பதவிக்காக அமைச்சர் பதவி ராஜினமாவா? ஆச்சரியத்தில் தேனி தொகுதி வாக்காளர்கள்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தீவிரமாக பரப்புரை செய்து வருகின்றனர்.  இதற்கிடையே, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் தமிழக பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.முர்த்தி, தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை அதிக வாக்கூ வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும். இதில் தேனி பாராளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெற செய்யாவிட்டால் தேர்தல் முடிவு மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினமா செய்வேன் என்று ஆவேசமாக ...

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்: உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை: சிவசேனா கட்சியினர் புகார்

தேனி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனைக்கு தேனி, திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினசரி 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரையிலான பொதுமக்கள் புறநோயாளிகளாக வருகை தந்து சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றன மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்  மருத்துவமனையில் உள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்நோயாளி சிகிச்சை பிரிவிற்குள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் உறவினர்கள் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படும் நிலையில் சுகாதாரம் அற்ற உணவுகளை உள் நோயாளி சிகிச்சை பிரிவுக்குள் விற்பனை செய்து வருவதாக சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் முருகவேல் மற்றும் சிவசேனா கட்சியினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், உள்நோயாளி சிகிச்சை பிரிவிற்குள் விற்பனை செய்ய அனுமதி இல்லாத நிலையில் ச...

தேனி ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் இந்திய செய்தித்தாள் தின கொண்டாட்டம்

இந்திய செய்தித்தாள் தினத்தை முன்னிட்டு 29.1.2024 அன்று ஸ்ரீ குமரன் தங்க மாளிகை தேனி கிளையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மாலைமலர் மாவட்ட நிருபர் நாகராஜ், தினக்குரல் மாவட்ட நிருபர் சசிகுமார் மற்றும் சுக்ரன் நியூஸ் மாத இதழ் சிறப்பு நிருபர் சரவணன் ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி செய்தித்தாள் தின வாழ்த்துக்களும், பரிசுகளும் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.. இதற்கான ஏற்பாடுகளை தேனி கிளை மேலாளர் பழனி சங்கர், மார்க்கெட்டிங் மேலாளர் வசந்த் பிரபாகரன் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பாண்டியன், உதவி ஆசிரியர் 

தேனி-வீரபாண்டியில் தே.மு‌.தி.க-வினர் மறைந்த விஜயகாந்திற்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு

தேனி மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மறைந்த தே.மு.தி.க நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு 30-ம் நாள் தர்ப்பணம் செய்யும் நிகழ்வு தேனி அருகே உள்ள வீரபாண்டி முல்லை ஆற்றங்கரை பகுதியில் 27.1.2024 அன்று நடைபெற்றது. இதன் பின்னர் தேனி மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து தேனியில் உள்ள மாவட்ட தே.மு.தி.க அலுவலகம் முன்பு பொதுமக்கள் மற்றும் தே.மு‌தி.க தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் வழங்கும் பணியை தேனி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் தேனி மாவட்ட கழக அவை தலைவர் மாயி, மாவட்ட பொருளாளர் முகமது, மாநில தொண்டரணி துணை செயலாளர் முருகன், மாவட்ட மகளிரணி சந்திரமதி, தேனி ஒன்றிய செயலாளர் கருணாகரன், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், வீரபாண்டி பேரூர் செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் முத்துக்குமார், வீரபாண்டி பேரூர் பொருளாளர் ராம்ராஜ், பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் பாண்டியராஜ் உள்பட தே.மு.தி.க நிர்வாகிகள், தொண்...

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா: கலெக்டர் ஷஜீவனா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது குடியரசு தினவிழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 26.1.2024 அன்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றிவைத்து, மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு, போலீசார் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவித்தும், சிறப்பாக பணியாற்றிய  காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், 64 பயனாளிகளுக்கு ரூ.3.92 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்  முன்னிலை வகித்தார். விழாவில் போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 67 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், முதலமைச்சரின் விரிவான காப்பீடு மற்றும் ஒருங்கிணைந்த பிரதம மந்திரியின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக சேவையளித்த 2 மருத்துவமனைகளுக்கும், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 3 அலுவலர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 100% தேர்ச்சி விழுக்காடு...

தேனி யூனியன் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், கனி (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணசாமி, கந்தவேல், கவிதா நந்தகோபால், ஊராட்சி பொறியாளர் அஜய் உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சித்திக் நன்றி கூறினார். இதேபோன்று தேனி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரீதா நடேஷ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட கவுன்சிலர்கள் இளம்வழுதி, வசந்தா உள்பட மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பாண்டியன், உதவி ஆசிரியர் 

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை துணைத்தலைவர், உறுப்பினர்கள் புறக்கணிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டம் தொடங்கிய உடனே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மதுமிதா மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியாத நிலை தற்போது உள்ளது.  அதுபோல ஊராட்சி மன்ற தலைவரின் தன்னிச்சையான போக்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடையே மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஊராட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊராட்சி துணை தலைவர் மதுமிதா தலைமையில் வார்டு உறுப்பினர்கள் அன்பழகன், மாலிக்கபூர் உள்பட கூட்டத்திற்கு வந்திருந்த வார்டு உறுப்பினர்கள் 7 பேர் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர்.  இதற்கிடையே கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பொதுமக்களில் ஒருவர் ஊராட்சி த...

தேனி மாவட்டத்தில் ரூ.47.34 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்புகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 517 ரேசன் கடைகளில் 4,26,971 ரேசன் கார்டுகளுக்கு ரூ.47.34 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி-சேலை மற்றும் ரூ.1,000 ரொக்க பணம் வழங்கும் பணிகளை பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டி பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தேனி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஆரோக்கிய சுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.  இதில் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள தேனி சமதர்மபுரத்தில்  அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன் கடை எண் 4-ல் விற்பனையாளர் மனோகரன் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். அதுபோல சமதர்மபுரம் கடை எண்  2-ல் ப...

தேனி மாவட்டத்தில் 4 நகராட்சி, 2 பேரூராட்சிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1,512 கோரிக்கை மனுக்கள்

தமிழ்நாட்டில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர், எஸ்.என்.ஆர். கல்லூரியில், "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் முகாம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள தேனி-அல்லிநகரம் நகராட்சி பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள டி.சி.ஏ மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்கள்  பதிவு செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முரளி, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாலமுருகன், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் ...

தேனியில் சிறுதானிய உணவு திருவிழா: கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தேனி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 14.12.2023 அன்று சிறுதானிய உணவுத் திருவிழா தேனி என்.ஆர்.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி அவர்கள் முன்னிலை வகித்தார்.  இந்த உணவு விழாவானது ஐ.நா. சபையால் 2023-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்களாகிய நுகர்வோர்கள் இடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவுத்திருவிழா நடத்த வேண்டும் என அறிவித்ததை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் உணவுத்திருவிழா நடைபெற்றது. நம் முன்னோர்கள் சிறுதானியங்களை அதிகமாக எடுத்துக்கொண்டதன் காரணமாகவும், உணவே மருந்து என்ற அடிப்படையில் அவர்களது வாழ்க்கை முறையினை அமைத்து கொண்டதன் காரணமாகவும் 100 ஆண்டுகள் நோய் நொடியில்லாமல்  வாழ்ந்தனர். நவீன கால மாற்றம் காரணமாக நமது பாரம்பரிய உணவு பழக்கங்கள...