தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்: உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை: சிவசேனா கட்சியினர் புகார்
தேனி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனைக்கு தேனி, திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினசரி 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரையிலான பொதுமக்கள் புறநோயாளிகளாக வருகை தந்து சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றன
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மருத்துவமனையில் உள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உள்நோயாளி சிகிச்சை பிரிவிற்குள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் உறவினர்கள் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படும் நிலையில் சுகாதாரம் அற்ற உணவுகளை உள் நோயாளி சிகிச்சை பிரிவுக்குள் விற்பனை செய்து வருவதாக சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் முருகவேல் மற்றும் சிவசேனா கட்சியினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், உள்நோயாளி சிகிச்சை பிரிவிற்குள் விற்பனை செய்ய அனுமதி இல்லாத நிலையில் சுகாதாரமற்ற உணவுகளை நோயாளிகளுக்கு விற்பனை செய்வதால் அவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவுகளை மருத்துவமனை அலுவலகத்தில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை தேனி மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளரிடம் சிவசேனா கட்சியினர் அளித்தனர்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments