தேனி மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மறைந்த தே.மு.தி.க நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு 30-ம் நாள் தர்ப்பணம் செய்யும் நிகழ்வு தேனி அருகே உள்ள வீரபாண்டி முல்லை ஆற்றங்கரை பகுதியில் 27.1.2024 அன்று நடைபெற்றது. இதன் பின்னர் தேனி மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தேனியில் உள்ள மாவட்ட தே.மு.தி.க அலுவலகம் முன்பு பொதுமக்கள் மற்றும் தே.முதி.க தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் வழங்கும் பணியை தேனி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் தேனி மாவட்ட கழக அவை தலைவர் மாயி, மாவட்ட பொருளாளர் முகமது, மாநில தொண்டரணி துணை செயலாளர் முருகன், மாவட்ட மகளிரணி சந்திரமதி, தேனி ஒன்றிய செயலாளர் கருணாகரன், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், வீரபாண்டி பேரூர் செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் முத்துக்குமார், வீரபாண்டி பேரூர் பொருளாளர் ராம்ராஜ், பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் பாண்டியராஜ் உள்பட தே.மு.தி.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments