Skip to main content

தேனி யூனியன் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா


தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், கனி (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணசாமி, கந்தவேல், கவிதா நந்தகோபால், ஊராட்சி பொறியாளர் அஜய் உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சித்திக் நன்றி கூறினார்.



இதேபோன்று தேனி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரீதா நடேஷ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட கவுன்சிலர்கள் இளம்வழுதி, வசந்தா உள்பட மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments