Skip to main content

தேனி மாவட்டத்தில் ரூ.47.34 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்புகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 517 ரேசன் கடைகளில் 4,26,971 ரேசன் கார்டுகளுக்கு ரூ.47.34 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி-சேலை மற்றும் ரூ.1,000 ரொக்க பணம் வழங்கும் பணிகளை பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டி பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தேனி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஆரோக்கிய சுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. 
இதில் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள தேனி சமதர்மபுரத்தில்  அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன் கடை எண் 4-ல் விற்பனையாளர் மனோகரன் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
அதுபோல சமதர்மபுரம் கடை எண் 
2-ல் பொங்கல் பரிசு தொகுப்புகளை விற்பனையாளர் முத்துமாரி வழங்கினார். 
சமதர்மபுரம் கடை எண் 5-ல் பொங்கல் பரிசு தொகுப்புகளை விற்பனையாளர் சேது பாலன் வழங்கினார். வள்ளி நகரில் உள்ள கடை எண் 2-ல் விற்பனையாளர் பாண்டி ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.


இதேபோன்று தேனி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (TCSS) கீழ் செயல்பட்டு வரும் கருவேல்நாயக்கன்பட்டி கடை எண் 13-ல் விற்பனையாளர் கணேசன் ரேசன் கார்டுளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். TCSS வளாகத்தில் உள்ள கடை எண் 11-ல் விற்பனையாளர் சதீஷ் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். 

அதுபோல தேனி அருகே வடபுதுபட்டி ஊராட்சி பகுதியில் உள்ள வடபுதுபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன் கடை எண் 1-ல் விற்பனையாளர் வேலுச்சாமி ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
இதேபோல் தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள அரண்மனைப்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன் கடையில் விற்பனையாளர் ரமேஷ் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
இதேபோன்று தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
......................................
பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments