Skip to main content

Posts

தேனி மாவட்டத்தில் நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்ட பணிகள் குறித்து உலக வங்கி உறுப்பினர்கள் கள ஆய்வு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொண்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் உலக வங்கியின் குழு உறுப்பினரும், மூத்த வேளாண் வணிக நிபுணர் பர்போட் யூசேபி மற்றும் உலக வங்கி உறுப்பினரும் வேளாண்மை மதிப்பு சங்கிலிகள் மற்றும் பகுப்பாய்வு ஆலோசகர் ஹம்மத் பட்டேல் ஆகியோர் முன்னிலையில் 21.9.2023 அன்று நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் (TNIAMP) 2 உப வடிநில பகுதிகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் நவீன முறையில் விற்பனைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக ரூ.120 லட்சமும், சுருளி ஆறு உபவடிநில பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 1 அணைக்கட்டு மற்றும் 3 வரத்து கால்வாய்களும், தேனி தாலுகாவில் உள்ள 3 அணைக்கட்டு மற்றும் 4 வரத்து கால்வாய்கள் புனரமைக்கும் பணி என ரூ.630.15 லட்சம் மதிப்பீட்டிலும், ...

வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 21 .9.2023 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட  கலெக்டர் தெரிவித்ததாவது, வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு  நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமானதாகவும், தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும்.  மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர்நிலை புறம்போக்குகளான ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகளின் உறுதி த...

தேனி நாடார் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் "சிறகுகளும் சிகரங்களும்" சிறப்புரை நிகழ்ச்சி

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் "சிறகுகளும் சிகரங்களும்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோடை பண்பலை முன்னாள் இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களிடையே நம்பிக்கை வேரூன்றும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.  இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், வித்யாலயா பள்ளி செயலாளர் நவமணி, இணை செயலாளர்கள் அய்யன் மூர்த்தி, தீபக் கணேஷ், உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் உறவின்முறை அனைத்து பள்ளி செயலாளர்கள், இணை செயலாளர்கள், முதல்வர் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சதிஷ், இணை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், நிருபர் 

சின்னமனூரில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: உற்சாகமாக எடுத்து சென்று ஆற்றில் கரைப்பு

தேனி மாவட்டம், சின்னமனூர் நகர், ஒன்றியம் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் 20.9.2023 அன்று நடைபெற்றது. ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி கெளர தலைவர் குப்பமுத்து தலைமை தாங்கினார். இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய.லோகநாதன், மாவட்ட செயலாளர்கள் இராமமூர்த்தி, சோலைராஜன், வெங்கலபாண்டி, தேனி நகர தலைவர் செல்வபாண்டியன், கம்பம் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர் ஜெயராம், உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் கோம்பை இளம்பரிதி, சின்னமனூர் ஒன்றிய பொறுப்பாளர் அப்பிபட்டி பார்த்திபன் மற்றும் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட, ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ரிஷிகேஷிலிருந்து வருகை புரிந்த சுவாமி ரகுவீரானந்தா அவர்கள் ஆசியுரை வழங்கினார்.  ஊர்வலத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன். இரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சின்னமனூரில் உள்ள பல்வேறு சமுதாயத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஊர்வலத்தை சின்னமனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் அய்யம்மாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்...

தேனி மாவட்டத்தில் அர்ப்பணம் மறுவாழ்வு விழிப்புணர்வு மையம் சார்பில் பனை விதை நடும் பணி

தேனி மாவட்டம், க.விலக்கு-கண்டமனூர் சாலையில் உள்ள அர்ப்பணம் மது போதை மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு மையம், சங்கமம் அறக்கட்டளை மற்றும் சுருளிபட்டியை சேர்ந்த அன்பு ராஜா சார்பில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு பனை விதை நடவு நிகழ்வு திருமலாபுரம் ஊராட்சி, பந்துவரர்பட்டி விலக்கு அருகே உள்ள குளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அர்ப்பணம் மறுவாழ்வு விழிப்புணர்வு மையம் நிர்வாக இயக்குனரும், சுக்ரன் நியூஸ் இதழ் இணை ஆசிரியருமான சதிஷ் தலைமை தாங்கினார். சங்கமம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார், சுருளிப்பட்டி அன்பு ராஜா, கம்பம் ராஜா சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி அன்னை டோரா கல்லூரி செயலாளர் டாக்டர் லட்சுமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அன்னை டோரா கல்லூரி மக்கள் தொடர்பாளர் யோகராஜன், அர்ப்பணம் மறுவாழ்வு விழிப்புணர்வு மையம் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது பனை விதை நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கண்மாய் கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பன...

தேனி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.95 லட்சம் நிர்ணயம்: முதல் விற்பனையை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்

கோ-ஆப்டெக்ஸ், என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 88 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.கோ-ஆப்டெக்ஸ்' விற்பனை நிலையங்களில் ஆர்கானிக் புடவை இரகங்கள். காஞ்சிபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்புவனம் பட்டு கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள், கண்டாங்கிச் சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், காஞ்சி காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன்', திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புகோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன்/பருத்தி (Linen/Cotton) சட்டைகள் லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும் மகளிருக்காக --சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி ...

தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு

தேனி மாவட்டம், தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு  மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, அரசு துணை சுகாதார நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா 20.9.2023 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவு கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், நியாய விலைக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் முறையாக நகர்வு செய்யப்படுகிறதா என்றும், சரியான எடை அளவில் கொண்டு செல்லப்படுகிறதா என்றும்  ஆய்வு செய்தார்.மேலும், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு பதிவேடு, காலி சாக்குகள் பதிவேடு, உள்வரும் வாகனங்கள் மற்றும் வெளி செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்கான பதிவேடு, தரக்கட்டுப்பாட்டு பதிவேடு, எடை அளவு பதிவேடு, விற்பனை பதிவேடு, அரிசி மற்றும் கோதுமை நகர்வு பதிவேடு, அட்டியல் அட்டைகள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பழனிசெட்டிபட்டி பேரூர...

தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் 14-வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க நாள் விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 14-வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க நாள் விழா 20.9.2023 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல். பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர்கள் A.ராஜ்குமார். A.S.R.மகேஸ்வரன், இணைச்செயலாளர் S.நவீன்ராம் ஆகியோர் வாழத்துரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் Dr.C.மதளைசுந்தரம்  கல்லூரியின் துறைத்தலைவர்களை அறிமுகப்படுத்தி, கல்லூரியின் விதிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்து வரவேற்புரை ஆற்றினார். விழாவில் இளம் தலைமுறை தன்னம்பிக்கை பேச்சாளர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ பருவத்தில் தற்காலிகமான மகிழ்ச்சியினை தவிர்த்து, நேர்மறையான எண்ணங்களை வளர்த்து எதிர்கால தேவைக்கான அறிவு மற்றும் ஆற்றல்களை பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து ஒழுக்கத்துடன் கூடிய நேர்மறையான சிந்தனைகள், வாழ்வின் மாற்றங்கள், சவால்களை எதிர்கொ...

ஆண்டிபட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: திட்ட குழு கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் கோரிக்கை

தேனி மாவட்ட திட்ட குழு கூட்டம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரிதா நடேசன் ஆகியோர் தலைமையில் நடந்தது. மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பெ.ராஜபாண்டியன்,  ஜி.கே.பாண்டியன், நாராயண பாண்டி, தங்கராஜ், தினகரன், நயினார் முகமது. பவானி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கூட்டத்தில் தேனி மாவட்ட கவுன்சிலர் மற்றும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜி.கே.பாண்டியன் பேசும் போது வைத்த கோரிக்கையில், ஆண்டிபட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளி சென்று வருவதிலும், அரசு அலுவலர்கள் பணிக்கு செல்வதிலும் அதிக அளவில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றன. மேலும் போக்குவரத்து நெரிசலால் அவசரகால வாகனமான ஆம்புலன்ஸ் சென்று வருவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆண்டிபட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அதுபோல பொதுமக்கள...

கலைஞர் 100 வினாடி-வினா போட்டிகள்: 2 நாட்களில் 4,215 குழுக்கள் பதிவு

தி.மு.க மகளிர் அணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டி, கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய திராவிட இயக்க தலைவர்கள் அனைவரும் வழிநடத்திய அறிவு புரட்சியின் சிறப்பான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்து செல்வதே இந்த வினாடி வினாவின் முதன்மை நோக்கமாகும். இந்த வினாடி வினா இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது: 18 வயதுக்குட்பட்ட பிரிவு 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவு (பொதுப் பிரிவு) வினாடி வினாவில் 4 சுற்றுகள் உள்ளன: 1. முதல் சுற்று இணையவழி வினாடி வினா 2. இரண்டாவது சுற்று மண்டல போட்டி 3. மூன்றாவது சுற்று  அரையிறுதி & இறுதி போட்டி முதல் சுற்று இணையவழி வினாடி-வினா செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கி அக்டோபர் 25, 2023 வரை நடைபெறுகிறது.வினாடி-வினா இணையதளம் - www.kalaignar100.co.in இணையவழி கற்று: இணையவழி வினாடி வினாவின் குறிக்கோள் மாவட்டத்தில் அதிகபட்ச மதிப்பெண்களை பெறுவதாகும். மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் மண்டல சுற்...