Skip to main content

சின்னமனூரில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: உற்சாகமாக எடுத்து சென்று ஆற்றில் கரைப்பு

தேனி மாவட்டம், சின்னமனூர் நகர், ஒன்றியம் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் 20.9.2023 அன்று நடைபெற்றது. ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி கெளர தலைவர் குப்பமுத்து தலைமை தாங்கினார். இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய.லோகநாதன், மாவட்ட செயலாளர்கள் இராமமூர்த்தி, சோலைராஜன், வெங்கலபாண்டி, தேனி நகர தலைவர் செல்வபாண்டியன், கம்பம் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர் ஜெயராம், உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் கோம்பை இளம்பரிதி, சின்னமனூர் ஒன்றிய பொறுப்பாளர் அப்பிபட்டி பார்த்திபன் மற்றும் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட, ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ரிஷிகேஷிலிருந்து வருகை புரிந்த சுவாமி ரகுவீரானந்தா அவர்கள் ஆசியுரை வழங்கினார். 


ஊர்வலத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன். இரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சின்னமனூரில் உள்ள பல்வேறு சமுதாயத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஊர்வலத்தை சின்னமனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் அய்யம்மாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சமயக்குமார்  தலைமையில் நகர அமைப்பாளர் வெற்றிவேல், நகர தலைவர் செந்தில்குமார், நகர பொதுச்செயலாளர் சந்தனபாண்டியன், நகர துணைதலைவர்கள் காளியப்பன், குட்டி என்ற பாலமுருகன், நகர செயலாளர்கள் கார்த்திக்குமார், ராஜா, நகர இணைச்செயலாளர் வேல்பாண்டி இந்து எழுச்சி இளைஞர் முன்னணி நகர தலைவர் மணிகண்ட பிரபு, துணைத்தலைவர் முத்துக்குமார், துணை செயலாளர் விக்னேஷ, தகவல் தொடர்பு கிரிஷன், ஒன்றிய தலைவர் கிஷோர் பாண்டியன், இளைஞரணி செயலாளர் சந்தோஷ், பூஜாரி பேரவையின் தலைவர் வேலுச்சாமி, செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சி சிறப்புற வழிகாட்டிகளாக பால்பாண்டியன், ராஜபாண்டியன், சுருளி ஆகியோர்கள் உறுதுணையாக இருந்தனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானுடைய அருளை பெற்றனர். ஊர்வலத்தின் போது 169 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.

சதிஷ், இணை ஆசிரியர்

ராதாகிருஷ்ணன், நிருபர் 

Comments