தி.மு.க மகளிர் அணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டி, கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய திராவிட இயக்க தலைவர்கள் அனைவரும் வழிநடத்திய அறிவு புரட்சியின் சிறப்பான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்து செல்வதே இந்த வினாடி வினாவின் முதன்மை நோக்கமாகும். இந்த வினாடி வினா இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது:
18 வயதுக்குட்பட்ட பிரிவு
18 வயதுக்கு மேற்பட்ட பிரிவு (பொதுப் பிரிவு) வினாடி வினாவில் 4 சுற்றுகள் உள்ளன:
1. முதல் சுற்று இணையவழி வினாடி வினா
2. இரண்டாவது சுற்று மண்டல போட்டி
3. மூன்றாவது சுற்று அரையிறுதி & இறுதி போட்டி
முதல் சுற்று இணையவழி வினாடி-வினா செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கி அக்டோபர் 25, 2023 வரை நடைபெறுகிறது.வினாடி-வினா இணையதளம் - www.kalaignar100.co.in
இணையவழி கற்று: இணையவழி வினாடி வினாவின் குறிக்கோள் மாவட்டத்தில் அதிகபட்ச மதிப்பெண்களை பெறுவதாகும். மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். பங்கேற்பாளர்கள் தங்கள் தொலைபேசி எண்கள் மற்றும் பிற அடிப்படை விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவும் 3 உறுப்பினர்களை கொண்டதாகும்.
ஒருவர் 'Take Quiz' என்பதை கிளிக் செய்தால், 100 வினாடிகளுக்கு ஒரு காலக்கெடு இயங்கி தொடங்கும். அந்த குறிப்பிட்ட முயற்சியில், 50 கேள்விகளுக்கு விடையளிக்க 100 வினாடிகள் கிடைக்கும். அனைத்து 50 கேள்விகளும் பலவினை தெரிவு வினாக்கள் (MCQs) ஆகும். சுற்றின் காலக்கெடு முடிவதற்குள் தங்கள் சிறந்த மதிப்பெண்ணை பெற ஒவ்வொரு குழுவிற்கும் மொத்தம் 100 முயற்சிகள் வழங்கப்படும்.
மண்டல சுற்று: ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் குழுக்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வினாடி வினா போட்டி நடத்தப்படும். இது ஒரு குழு வினாடி வினா போட்டியாக இருக்கும். மண்டலத்தின் வெற்றியாளர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
அரையிறுதி: மண்டலத்தின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெற உள்ள அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
இறுதிப் போட்டி; அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதி போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மற்ற பரிசுகள் உள்ளன. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பரிசுகளை வழங்குவார்.
சதிஷ், இணை ஆசிரியர்
சிவபாலன், சிறப்பு நிருபர்
Comments