Skip to main content

ஆண்டிபட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: திட்ட குழு கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் கோரிக்கை

தேனி மாவட்ட திட்ட குழு கூட்டம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரிதா நடேசன் ஆகியோர் தலைமையில் நடந்தது. மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பெ.ராஜபாண்டியன்,  ஜி.கே.பாண்டியன், நாராயண பாண்டி, தங்கராஜ், தினகரன், நயினார் முகமது. பவானி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கூட்டத்தில் தேனி மாவட்ட கவுன்சிலர் மற்றும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜி.கே.பாண்டியன் பேசும் போது வைத்த கோரிக்கையில், ஆண்டிபட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளி சென்று வருவதிலும், அரசு அலுவலர்கள் பணிக்கு செல்வதிலும் அதிக அளவில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றன. மேலும் போக்குவரத்து நெரிசலால் அவசரகால வாகனமான ஆம்புலன்ஸ் சென்று வருவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆண்டிபட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

அதுபோல பொதுமக்கள், வணிகர்கள், மற்றும் வாகன ஓட்டிகளை காக்கும் வகையில், காற்று மாசுபடுதலை தவிர்த்திடும் வகையிலும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஆண்டிபட்டி நகர் பகுதியில் பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பிரகாஷ், மாவட்ட ஊராட்சி செயலாளர்/திட்ட அலுவலர் சிவகுமார். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை மற்றும் நகர் மன்ற தலைவர்கள். பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சதிஷ், இணை ஆசிரியர் 

சசிதுரை, சிறப்பு நிருபர் 

Comments