Skip to main content

தேனி மாவட்டத்தில் அர்ப்பணம் மறுவாழ்வு விழிப்புணர்வு மையம் சார்பில் பனை விதை நடும் பணி

தேனி மாவட்டம், க.விலக்கு-கண்டமனூர் சாலையில் உள்ள அர்ப்பணம் மது போதை மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு மையம், சங்கமம் அறக்கட்டளை மற்றும் சுருளிபட்டியை சேர்ந்த அன்பு ராஜா சார்பில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு பனை விதை நடவு நிகழ்வு திருமலாபுரம் ஊராட்சி, பந்துவரர்பட்டி விலக்கு அருகே உள்ள குளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அர்ப்பணம் மறுவாழ்வு விழிப்புணர்வு மையம் நிர்வாக இயக்குனரும், சுக்ரன் நியூஸ் இதழ் இணை ஆசிரியருமான சதிஷ் தலைமை தாங்கினார். சங்கமம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார், சுருளிப்பட்டி அன்பு ராஜா, கம்பம் ராஜா சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி அன்னை டோரா கல்லூரி செயலாளர் டாக்டர் லட்சுமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அன்னை டோரா கல்லூரி மக்கள் தொடர்பாளர் யோகராஜன், அர்ப்பணம் மறுவாழ்வு விழிப்புணர்வு மையம் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது பனை விதை நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கண்மாய் கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.

சீனிவாசன், உதவி ஆசிரியர்

ராதாகிருஷ்ணன், நிருபர் 

Comments