தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் "சிறகுகளும் சிகரங்களும்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோடை பண்பலை முன்னாள் இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களிடையே நம்பிக்கை வேரூன்றும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், வித்யாலயா பள்ளி செயலாளர் நவமணி, இணை செயலாளர்கள் அய்யன் மூர்த்தி, தீபக் கணேஷ், உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் உறவின்முறை அனைத்து பள்ளி செயலாளர்கள், இணை செயலாளர்கள், முதல்வர் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சதிஷ், இணை ஆசிரியர்
ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments