ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரித்துறை மதுரை ஆணையரகத்தின் சார்பில் வணிகர்களுக்கான ஒரு நாள் திட்ட விளக்க கூட்ட நிகழ்ச்சி 24.8.2023 அன்று தேனி அருகே உள்ள ஏ.பி.எம். ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை ஆணையரகத்தின் ஆணையர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கோட்ட உதவி ஆணையர் வெங்கடசுப்பிரமணியன் ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி செலுத்துவது குறித்து வணிகர்களுக்கு விளக்கம் அளித்து பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார், தொழிலதிபர் சுதாகர், திண்டுக்கல் கோட்ட அலுவலக கண்காணிப்பாளர் அமராவதி, தேனி சரக ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் உள்பட தேனி மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட நிகழ்ச்சியின் போது ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி செலுத்துதல் குறித்த சந்தேகங்களை வணிகர்கள் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். முடிவில் திண்டுக்கல் கோட்ட உதவி ஆணையர் ஜெயபால் நன்றி கூறினார். S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர் R.ராதாகிருஷ்ணன்...
Publisher of the Website : Nagaraj Kamudurai