Skip to main content

Posts

தேனியில் வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் வரி குறித்து திட்ட விளக்க கூட்டம்

ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரித்துறை மதுரை ஆணையரகத்தின் சார்பில் வணிகர்களுக்கான ஒரு நாள் திட்ட விளக்க கூட்ட நிகழ்ச்சி 24.8.2023 அன்று தேனி அருகே உள்ள ஏ.பி.எம். ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை ஆணையரகத்தின் ஆணையர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கோட்ட உதவி ஆணையர் வெங்கடசுப்பிரமணியன் ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி செலுத்துவது குறித்து வணிகர்களுக்கு விளக்கம் அளித்து பேசினார்.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார், தொழிலதிபர் சுதாகர், திண்டுக்கல் கோட்ட அலுவலக கண்காணிப்பாளர் அமராவதி,  தேனி சரக ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் உள்பட தேனி மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கூட்ட நிகழ்ச்சியின் போது ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி செலுத்துதல் குறித்த சந்தேகங்களை வணிகர்கள் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். முடிவில் திண்டுக்கல் கோட்ட உதவி ஆணையர் ஜெயபால் நன்றி கூறினார். S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர்  R.ராதாகிருஷ்ணன்...

தேனியில் யூனியன் வங்கி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி

தேனியில் யூனியன் வங்கியின் தேனி அல்லிநகரம் கிளை மற்றும் வீரபாண்டி கிளையின் சார்பில் பிரதம மந்திரி ஸ்ரிட் வெண்டர் ஆத்ம நிரூப திட்டத்தின் கீழ் சாலையோர வியாபரிகளுக்கான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி பழனிசெட்டிபட்டியில் உள்ள வீரபாண்டி கிளையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் உதவிகளை  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் யூனியன் வங்கி பிராந்திய மேலாளர் அபிஜித், வீரபாண்டி கிளை மேலாளர் லெட்சுமணன், அல்லிநகரம் கிளை மேலாளர் கிறிஸ்து ததேயூஸ் ராஜா, நகராட்சி நகர அமைப்பு அலுவலர் அப்துல் சலர் நாசர், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ் குமார், சுகாதார அலுவலர் அறிவுச் செல்வம், சமுதாய அமைப்பாளர்கள் தமிழ்மணி, ராஜசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 205 பயனாளிகளுக்கு ரூ‌10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கடன் உதவிகள் வழங்கப்பட்டது. S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர் 

தேனி யூனியன் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட                    அரண்மனைப்புதூர் மற்றும் கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதிகளில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 23.8.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.301.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், அரண்மனைப்புதூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும்,   15-வது நிதிக்குழு மானியம் (2022-23) திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம்  மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும், கோட்டைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்...

தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் பி.எட்., மாணவிகளுக்கான பிரைட் பிகினிங் விழா

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் 23.8.2023 (புதன்கிழமை) அன்று பி.எட்., மாணவிகளுக்கு பிரைட் பிகினிங் - 2023 விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் அனைத்து நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி முதல்வர் பியூலா ராஜினி வரவேற்புரை வழங்கினார். விழாவில் பொருளறிவியல் துறை உதவி பேராசிரியர் யோகா அஞ்சுஸ்ரீ, சிறப்பு விருந்தினர் பெரியகுளம் டி.எஸ்.பி., கீதா திருவாசகம் அவர்களை அறிமுகம் செய்தார். விழாவில் டி.எஸ்.பி., கீதா திருவாசகம் பேசுகையில், வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் தனித்துவமானது. அதை தெரிந்து செய்தால் வெற்றி என்பது நிச்சயம். எதையும் ஆர்வத்துடன் படித்தால் யாரும் அதை தூண்ட வேண்டும் என்ற அவசியம் இருக்காது. உங்களுக்குள் திறமைகள் இருக்கிறது அதை சரியாக பயன்படுத்தினால் வெற்றி என்பது நிச்சயம். ஆசிரிய மாணவிகளாகிய நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் கற்பனை ...

தேனி வீரப்ப அய்யனார் கோவிலில் நந்தி சிலை வைத்த விவகாரம் : மதுரை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை இன்று நடக்கிறது

தேனி அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் முன்பு கடந்த மாதம் நந்தி சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை வைத்தது ஆகம விதிக்கு முரணாக இருப்பதாக கூறி, இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் சிவசேனா கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் இந்த வழக்கு 23.8.2023 அன்று  விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆஜராகி வீரப்ப அய்யனார் கோவிலில் ஆகம விதி மீறப்பட்டுள்ளதா? நந்தி சிலை வைக்க அனுமதிக்கப்படுமா? அல்லது சிலை அகற்றப்படுமா? என்பது குறித்த கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். S.R. சீனிவாசன், உதவி ஆசிரியர் 

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை திறப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக 22.8.2023 அன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர்.  ஆயுர்வேத மருத்துவம் மிக பழமையானது. நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை. ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். ஆயுர்வேத முறையில் அதிக அளவில் மூலிகை செடிகளை வைத்து மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கென மருத்துவமனை வளாகத்தில் மூலிகை தோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில், இந்திய மருத்துவமுறைகளில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய முறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படும். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனை சுமார் ரூ.6.75 கோடி மதிப்ப...

தேனியில் தே.மு.தி.க சார்பில் வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டம்: நலத்திட்ட உதவிகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்

தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டம் தேனி அல்லிநகரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாயி, மாவட்ட பொருளாளர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தையல் இயந்திரம், கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "கேப்டன் எப்படி இருக்கிறார் என்று நான் போகும் இடமெல்லாம் என்னிடம் கேட்கிறார்கள். கேப்டன் நல்லா இருக்கிறார். நம்மோடு 100 ஆண்டு காலம் இருந்து நம்மளை வழிநடத்துவார். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நல்லவர்கள் வாழ்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ந்ததாக இருக்கக் கூடாது. கேப்டன் போல் நல்லவர்கள் வாழ வேண்டும். அதை பார்த்து ஒரு 100 பேர் மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாநாட்டை தே.மு.தி.க கூட்ட உள்ளது. அதற்கு நிச்சயம் கேப்டன் வருவார். கேப்டனின் மறு உருவமாக விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன்  இருக்கிறார்கள். தொண்டர்கள் எதற...

தேனியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ஆய்வு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு  செயலாளர் ஆர். செல்வராஜ் அவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகிய அலுவலகங்களை தேனி மாவட்ட  கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில் 19.8.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டு கூறுகளில் ஒன்றாகும். தன்னை பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனி ஆற்றல் பெற்றது. எண்ணத்தின் வடிவமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி மனித சமுதாய இணைப்புக்கும் துணை செய்கின்றது. உலக அறிஞர்களால் போற்றிப் பாராட்டப்பட்டும் தமிழ் நமது ஆட்சி மொழியாக திகழ்கிறது. அரசின் தமிழ் வளர்ச்சி இயக்ககம் உலகத் தமிழாராய்ச்சி  நிறுவனம், தமிழ் பல்கலைக்கழகம் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம், அறிவியல் தமிழ் மன்றம் தலைமைய செயலக மொழி பெயர்ப்பு பிரிவு எனும் அமைப்புகள் வழியாகச் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன. அனைத்துத்துறை அலுவலர்கள் கோப்புகள் அனைத்தையும் தமிழில் பராமரிக்க வேண்டும் அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பம் இடவும், அரசு கட...

தேனி மாவட்டத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 317 பேருக்கு பணி நியமன ஆணை

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 19.8.2023 அன்று தொடங்கி வைத்து வேலைதேடும் இளைஞர்களுக்கு தனியார்துறைகளில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர்  பேசுகையில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம் (மகளிர் திட்டம்) இணைந்து  மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் வேலைநாடும் இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கத்தில் தனியார்துறை நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என உத்திரவிட்டார்கள். அதன்படி தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற...

தேனி மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகள் கவனிப்பு மையத்தினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  தொலைக்காட்சி வசதியுடன்  கூடிய குளிரூட்டப்பட்ட கவனிப்பு மையத்தினை மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா 18.8.2023 அனங தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அரசின் சார்பில் மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு முடிந்து பணியில் சேரும், ஒரு குடும்பத்தில் கணவன். மனைவி அல்லது இருவரும் அரசு ஊழியர்களாக பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளை கவனித்து கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் என மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அரசு பெண் ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பராமரிப்பதற்காக  மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தின் 3-வது மாடியில் குளிரூட்டப்பட்ட மற்றும் தொலைக்காட்சி வசதி...