Skip to main content

தேனியில் யூனியன் வங்கி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி

தேனியில் யூனியன் வங்கியின் தேனி அல்லிநகரம் கிளை மற்றும் வீரபாண்டி கிளையின் சார்பில் பிரதம மந்திரி ஸ்ரிட் வெண்டர் ஆத்ம நிரூப திட்டத்தின் கீழ் சாலையோர வியாபரிகளுக்கான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி பழனிசெட்டிபட்டியில் உள்ள வீரபாண்டி கிளையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் உதவிகளை  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் யூனியன் வங்கி பிராந்திய மேலாளர் அபிஜித், வீரபாண்டி கிளை மேலாளர் லெட்சுமணன், அல்லிநகரம் கிளை மேலாளர் கிறிஸ்து ததேயூஸ் ராஜா, நகராட்சி நகர அமைப்பு அலுவலர் அப்துல் சலர் நாசர், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ் குமார், சுகாதார அலுவலர் அறிவுச் செல்வம், சமுதாய அமைப்பாளர்கள் தமிழ்மணி, ராஜசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 205 பயனாளிகளுக்கு ரூ‌10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments