Skip to main content

தேனி வீரப்ப அய்யனார் கோவிலில் நந்தி சிலை வைத்த விவகாரம் : மதுரை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை இன்று நடக்கிறது

தேனி அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் முன்பு கடந்த மாதம் நந்தி சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை வைத்தது ஆகம விதிக்கு முரணாக இருப்பதாக கூறி, இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் சிவசேனா கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தனர். 




இந்நிலையில் இந்த வழக்கு 23.8.2023 அன்று  விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆஜராகி வீரப்ப அய்யனார் கோவிலில் ஆகம விதி மீறப்பட்டுள்ளதா? நந்தி சிலை வைக்க அனுமதிக்கப்படுமா? அல்லது சிலை அகற்றப்படுமா? என்பது குறித்த கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.

S.R. சீனிவாசன், உதவி ஆசிரியர் 


Comments