தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ஆர். செல்வராஜ் அவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகிய அலுவலகங்களை தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில் 19.8.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டு கூறுகளில் ஒன்றாகும். தன்னை பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனி ஆற்றல் பெற்றது. எண்ணத்தின் வடிவமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி மனித சமுதாய இணைப்புக்கும் துணை செய்கின்றது. உலக அறிஞர்களால் போற்றிப் பாராட்டப்பட்டும் தமிழ் நமது ஆட்சி மொழியாக திகழ்கிறது. அரசின் தமிழ் வளர்ச்சி இயக்ககம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் பல்கலைக்கழகம் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம், அறிவியல் தமிழ் மன்றம் தலைமைய செயலக மொழி பெயர்ப்பு பிரிவு எனும் அமைப்புகள் வழியாகச் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன. அனைத்துத்துறை அலுவலர்கள் கோப்புகள் அனைத்தையும் தமிழில் பராமரிக்க வேண்டும் அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பம் இடவும், அரசு கடிதங்களை தமிழில் பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்களில் உள்ள பெயா்கள் பலகைகளில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் வளா்ச்சி துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அலுவலக பணிகள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகளை பார்வையிட்டார். பத்திரிக்கையாளர் நல வாரியம் தொடர்பான கோப்புகள், தினசரி செய்தி நறுக்குகள், எதிர்மறை செய்திகள் குறித்து மாவட்ட கலெக்டர் அவர்களின் குறிப்பின்படி அனைத்து துறைகளுக்கும் விளக்கம் கோருதல், அரசு விழாக்களில் அரசுச்சீர் மரபு முறை (Protocol) பின்பற்றுதல், திரையரங்க ஆய்வு, வீடியோ படக்காட்சி ஆய்வு தொடர்புடைய நடப்பு கோப்புகளை பார்வையிட்டார். மேலும், அரசு நிர்ணயித்துள்ள தமிழரசு சந்தா குறியீடு இலக்கினை குறித்த காலத்திற்குள் எய்திட செய்தி மக்கள் தொடா்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் புகைப்படக்கண்காட்சி, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருத்த புகைப்படங்களையும் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து தேனி பங்களாமேடு மற்றும் பழைய பேருந்து நிலையம், கடை வீதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட அளவில் தமிழில் பெயர் பலகை நிறுவப்படாத கடை மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ஆர். செல்வராஜ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் இளங்கோ, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர்
R ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments