Skip to main content

Posts

மது போதை தகராறில் தொழிலாளி காலில் ஏர்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்தது: நுண் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு

கோவை, செப்.20- கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வாரம், ஈரோடு அம்மா பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செந்தில் குமார் (வயது 45) தனது நண்பருடன் மது குடிக்கும் போது போதையில் ஏற்பட்ட தகராறில் ,நண்பர் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் வலது கால் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செந்தில்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். இதனை அடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் ஏர்கன், ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக உள் இருந்தது கண்டறியப்பட்டது.  நோயாளியின் நிலையை நிலைப்படுத்திய பிறகு, அவருக்கு இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில், துப்பாக்கியால் சேதமடைந்த ரத்த நாளம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டு, எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக இருந்த துப்பாக்கி குண்டு வெற்றிகரமாக மீட்டு எடுக்கப்பட்டது. இதனால் நோயாளியின் உயிர் காப்பாற்றப்பட்டது. தற்போது செந்தில்குமார் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இதில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கூறுகையில்  நோயாளியின் க...

சுற்றுச்சூழல் காக்கும் முயற்சிகளுக்காக சிறுதுளி அமைப்புக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவை, செப்.20- டெல்லியில் CSR யுனிவர்ஸால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக தாக்க மாநாடு மற்றும் விருதுகளின் (SICA) 4-வது பதிப்பில், நிலையான சுற்றுச்சூழல் பிரிவில், 2024 க்கான சமூக அக்கறை விருது சிறுதுளிக்கு வழங்கப்பட்டுள்ளது. 450-க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்ட விருதுக்கான  தேர்வில் சிறுதுளி இந்த தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது என்றனர். மேலும் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு அமைப்புகளில் ஒன்றாகும். அதில் கோவையை சேர்ந்த சிறுதுளியின் முதன்மை முயற்சியான நன்னீர் திட்டத்தின் வெற்றியை இந்த விருது சிறப்பித்துக் காட்டுகிறது என்றார்கள். இங்கே மூலோபாய, நிலையான மற்றும் அளவிடக்கூடிய அணுகுமுறை, புதுமையான தீர்வுகள் மற்றும் விதிவிலக்கான சமூக ஈடுபாட்டிற்காக பாராட்டப்பட்டது. நன்னீர் திட்டம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சிறுதுளி அமைப்பின் பணி முக்கியமான விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது, முக்கிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்கிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நீண்டகாலமாக இந்த நீர்நிலைகளை நம்பியுள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள கண்மாய்களை (பாரம்ப...

கோவை பேரூர் ஆதினத்திடம் கருணாநிதி உருவம் அச்சிட்ட 100 ரூபாய் நாணயம் வழங்கி ஆசி பெற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கோவை, செப்.20- உழைப்பிற்கு எடுத்து காட்டாக ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் செல்லபிள்ளை கலைஞரின் பேரப்பிள்ளை  உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் பதவி கொடுப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். கோவை, பேரூர் ஆதினம் மடத்தில்  மருதாசல அடிகளார் சுவாமிகளை  நேரில் சந்தித்த சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை அவரிடம் வழங்கி ஆசிபெற்றார். அவருடன் சிறுபான்மை மாநில பொறுப்பாளர் ரபீக், ஏர்போர்ட் முருகேசன், மற்றும் சிறுபான்மை அமைப்பினர்,உறுப்பினர்கள் உடன் இருந்தனர். அப்போது பேசிய அமைச்சர் பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் ஆன்மீகம் பேசும் இந்த மடத்தில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும், தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கு மட்டுமின்றி அனைத்து சமூகத்தை அரவணைத்து செல்லும் இடமாகவும், சமூக நீதிக்கு எடுத்துகாட்டாகவும் , கோவையில் செம்மொழி நடத்துவதற்கு உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.  மேலும் முதல்வரை சந்தித்த போது, கோவைக்கு செல்கிறேன். பேரூர் ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை அளிக...

கோவையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை : மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

  கோவை, செப்.16- கோவை நகரின் மைய பகுதியான பெரியகடைவீதி,  மணி கூண்டு அருகில் பாரம்பரிய கைவினை கலைஞர்கள் உருவாக்கிய கலை பொருட்கள் விற்கும், பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளது, இது தமிழ்நாடு அரசின் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் நிர்வாகிக்கபடுகிறது, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில்  இரண்டாவது பெரும் பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையமாக உள்ளது . இங்கே ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்காலங்களில்  கண்காட்சிகளை நடத்தி வருகின்றனர். அதுபோன்று, இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு "கொலு பொம்மைகள்"  சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை செப் 16 முதல் 25 ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் பூம்புகாரின் சிறப்பு கண்காட்சி  விற்பனையை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி  குத்துவிளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் தசாவதாரம், விநாயகர், அரண்மனை தர்பார்,, அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், திருப்பதி, குபேரன், வைகுண்ட பெருமாள், மைசூர்தசரா காட்சி  பொம்மைகளுடன், புதிய வரவாக விண்ணில் ச...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா

தேனி, செப்.16- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மதளை சுந்தரம் ஓணம் பண்டிகை வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலிமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி, பாயாசம் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் மாதவன். சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்...

கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் உடமைகளை போதை தடுப்பு போலீசார் மோப்ப நாயுடன் சோதனை

கோவை, செப்.16- போதை பொருள்களை ரயில்களில் கடத்தப்பட்டு வருவதை தடுக்கும் விதமாக தொடர் சோதனையில் ஈடுபட்ட  கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயில் நிலையங்களில், ரயில்களில் வரும் நபர்களின் உடமைகளை சோதனைக்கு உட்படுத்தினர் , போதை பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ஜெயராஜ் உத்தரவு படி ஆய்வாளர் குமரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசாரும் ரயில்வே ஸ்டேசனில் மோப்ப நாய் டைகர் உடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இதில் ஒடிசா, ஆந்திரா வழியே வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் பெட்டிகளில்  ஏறி சோதனையிட்டனர், அதே போன்று பிளாட் பார்த்திலும் இருந்த பயணிகளின் உடமைகளை மோப்ப நாயுடன் பரிசோதனை செய்தனர். மேலும் தன்பாத் ரயிலில் ஏறி சோதனை செய்ததில் 4 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் ஒடிசா, ஆந்திராவிலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதை தொடர்ந்து கண்காணித்து பிடித்து வருகிறோம், கடந்த எட்டு மாதங்களில் 300 கிலோ கஞ்சாவையும் மற்றும் அதனை கடத்தி வந்த 20 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைந்துள...

போடி அருகே சிலமலையில் விவசாயிகளுக்கு பஞ்சகாவியம் குறித்து கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம்

தேனி, செப்.16- தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சிலமலையில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பஞ்சகாவியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கல்லூரியை சேர்ந்த டாக்டர் விஜயகுமார், டாக்டர் செல்வராணி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் இராஜமுருகன் ஆகியோரின் அறிவுரையின்படி சிலமலை ராமமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் மாணவிகள் M.துர்காதேவி, M. ரஷ்நிகா, R.அர்ச்சனா, V. சுமித்ரா, G.L.கௌசல்யா, T. பிரித்தி ஆகியோர் பஞ்சகாவ்யா செயல்முறை விளக்கம் குறித்து சிலமலை. விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். மேலும் பஞ்சகாவியம் தயாரிப்பதற்கு தேவையான மாட்டுச்சாணம், நெய், கோமியம், தண்ணீர், வாழைப்பழம் போன்ற பொருட்களை எந்த அளவில் சேர்த்து தயாரிப்பது என்பது குறித்தும் செயல்முறையில் விளக்கம் அளித்தனர். நாகராஜ், முதன்மை நிருபர் 

தேனி நகர் பெரியகுளம் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும் : இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு நிகழ்ச்சியில் வலியுறுத்தல்

தேனி, செப்.15- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு நிகழ்ச்சி 15.9.2024 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர அமைப்பாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கனகுபாண்டி முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வழிகாட்டினர். நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கீழ்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன  தீர்மானம் (1)  தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒரு சில வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக அதை சரி செய்ய முன்வர வேண்டும். தீர்மானம் (2)  தேனி நகர் பெரியகுளம் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து எழுச்சி முன்னணி மரக்கன்றுகளை நடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் (3) நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு உறுதுணையாக இருந்த பொறுப்பாளர்களுக்கும், கமிட்டி உறுப்பினர்களுக்கும்...

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் : கண்கவரும் பாரம்பரிய ஆடையில் அசத்திய ஜோடிகளுக்கு தங்க நாணயம் பரிசு

கோவை, செப்.15- கோவை ரயில் நிலைய சந்திப்பு  வளாகத்தில் ரயில்வே நிர்வாக அனுமதியுடன் தனியார் பங்களிப்பில் ரயில்  பெட்டியில் குளிரூட்டபட்ட  நவீன ஹோட்டலை திறந்து இந்திய கலாச்சார உணவு வகைகளை சுவையுடன் ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கும்  கேரளாவை பாபி குரூப் என்ற  போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் நடத்தி வரும் ரயில் பெட்டி உணவகத்தில், ஓணம் திருநாளை ஓட்டி  ஓணம் சத்யா என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.  அதில் ஓணம் பண்டிகையில் கேரள மக்கள் மகாபாலி வரவேற்கும் விதமாக  பாரம்பரிய உணவு முறையாக,உறவினர்கள்  விருந்தினர்களுக்கு வாழை இலையில் அரிசி சாதத்துடன் சாம்பார், 21 வகை காய்கறி கூட்டு பொறியல், பழம், பாயாசத்துடன் அப்பளம் என சாப்பிட செய்து மகிழ்விப்பார்கள்.  அதே போன்று  ஓணம் சிறப்பு உணவு சாப்பிட 200 நபர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களுக்கு ஸ்பெஷல் ஓணம் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது. இந்த ஓணம் உணவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்கள், ஜோடியாகவும், குழந்தைகளுடனும்,கேரளா கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய முறையில் ...

ஆண்டிபட்டி அருகே ஜக்கம்மாள்பட்டியில் சிவனம்மாள் கோவில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி, செப்.16 - தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ஜக்கம்மாள்பட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவனம்மாள் சுவாமி, ஸ்ரீ கருப்பசாமி, கன்னிமார்கள் சுவாமிகள் கோவிலின் மகா கும்பாபிஷேகம் 15.9.2024 அன்று நடைபெற்றது.  விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக யாகசாலை பூஜை கள் நடத்தி பூர்ணாகுதி செய்யப்பட்டு ,மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து கடங்கள் புறப்பாடாகி, விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது.  அதன் பின்னர் புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து கோவிலில் உள்ள மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சங்கு தேவர் கொத்து வழிக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். சசி துர...