மது போதை தகராறில் தொழிலாளி காலில் ஏர்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்தது: நுண் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு
கோவை, செப்.20- கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வாரம், ஈரோடு அம்மா பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செந்தில் குமார் (வயது 45) தனது நண்பருடன் மது குடிக்கும் போது போதையில் ஏற்பட்ட தகராறில் ,நண்பர் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் வலது கால் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செந்தில்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். இதனை அடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் ஏர்கன், ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக உள் இருந்தது கண்டறியப்பட்டது. நோயாளியின் நிலையை நிலைப்படுத்திய பிறகு, அவருக்கு இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில், துப்பாக்கியால் சேதமடைந்த ரத்த நாளம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டு, எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக இருந்த துப்பாக்கி குண்டு வெற்றிகரமாக மீட்டு எடுக்கப்பட்டது. இதனால் நோயாளியின் உயிர் காப்பாற்றப்பட்டது. தற்போது செந்தில்குமார் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இதில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கூறுகையில் நோயாளியின் க...