தேனி, செப்.16-
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மதளை சுந்தரம் ஓணம் பண்டிகை வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலிமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி, பாயாசம் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் மாதவன். சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், சயின்ஸ் அண்டு ஹிமானீட்டீஸ் துறையின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தினர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments