தேனி நகர் பெரியகுளம் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும் : இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு நிகழ்ச்சியில் வலியுறுத்தல்
தேனி, செப்.15-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு நிகழ்ச்சி 15.9.2024 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர அமைப்பாளர்
முத்துராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கனகுபாண்டி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வழிகாட்டினர்.
நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கீழ்கண்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தீர்மானம் (1)
தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒரு சில வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக அதை சரி செய்ய முன்வர வேண்டும்.
தீர்மானம் (2)
தேனி நகர் பெரியகுளம் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து எழுச்சி முன்னணி மரக்கன்றுகளை நடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் (3)
நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு உறுதுணையாக இருந்த பொறுப்பாளர்களுக்கும், கமிட்டி உறுப்பினர்களுக்கும்
நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இந்து எழுச்சி முன்னணி தெரியப்படுத்தி கொள்கிறது.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments