கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் : கண்கவரும் பாரம்பரிய ஆடையில் அசத்திய ஜோடிகளுக்கு தங்க நாணயம் பரிசு
கோவை, செப்.15-
கோவை ரயில் நிலைய சந்திப்பு வளாகத்தில் ரயில்வே நிர்வாக அனுமதியுடன் தனியார் பங்களிப்பில் ரயில் பெட்டியில் குளிரூட்டபட்ட நவீன ஹோட்டலை திறந்து இந்திய கலாச்சார உணவு வகைகளை சுவையுடன் ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கும் கேரளாவை பாபி குரூப் என்ற போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் நடத்தி வரும் ரயில் பெட்டி உணவகத்தில், ஓணம் திருநாளை ஓட்டி ஓணம் சத்யா என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
அதில் ஓணம் பண்டிகையில் கேரள மக்கள் மகாபாலி வரவேற்கும் விதமாக பாரம்பரிய உணவு முறையாக,உறவினர்கள் விருந்தினர்களுக்கு வாழை இலையில் அரிசி சாதத்துடன் சாம்பார், 21 வகை காய்கறி கூட்டு பொறியல், பழம், பாயாசத்துடன் அப்பளம் என சாப்பிட செய்து மகிழ்விப்பார்கள்.
அதே போன்று ஓணம் சிறப்பு உணவு சாப்பிட 200 நபர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களுக்கு ஸ்பெஷல் ஓணம் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது. இந்த ஓணம் உணவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்கள், ஜோடியாகவும், குழந்தைகளுடனும்,கேரளா கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய முறையில் புத்தாடைகளை அணிந்து வருகை தந்தார்கள். உணவகத்தினர் செண்டை, மேளதாளத்துடன் வரவேற்று ஓணம் விருந்து படைத்தனர். மேலும் அங்கே கூடிய பொதுமக்களையும், ரயில் பயணிகளையும் வெகுவாக கவர்ந்தனர்,
உணவகம் சார்பில் மனதை கவர்ந்த ஜோடிகளுக்கு தங்க நாணயம் வழங்க முன் வந்ததனர், இதில் பாரம்பரிய உடை அணிந்து வந்து அசத்திய கேரளா, கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த டினோ எஸ்டர் ஜோடிக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயமும், கோவையை சேர்ந்த வினித் அனிதா தம்பதிக்கு இரண்டாம் பரிசாக 2 கிராம் தங்க நாணயமும், மூன்றாவதாக ஓட்டலில் நடந்த ஓணம் நிகழ்ச்சியை புகைப்படங்களாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அதிக பார்வையாளர்களை கவர்ந்த பாதுஷா-க்கு ஒரு கிராம் தங்க நாணயத்தை பரிசாக, நிர்வாக பங்குதாரர் டாக்டர் ஷயின் வழங்கினார். அப்போது உணவகத்தின் மேலாளர் ஜோசப் உடன் இருந்தார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments