Skip to main content

Posts

தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு சட்டபேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் 31.5.2023 அன்று ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக  வளர்ச்சி  அலுவலக கூட்டரங்கில் அரசு துறைகளின் கீழ் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் /  பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில், மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, உறுதிமொழி குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.அருள் (சேலம் மேற்கு), ஐ.கருணாநிதி (பல்லாவரம்), எம்.சக்கரபாணி (வானூர்), எம்.கே.மோகன்  (அண்ணா நகர்),  பி.ராமலிங்கம் (நாமக்கல்) சட்டப்பேரவை செயலாளர்  கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்  கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, சட்டமன்ற பேரவையின் இணைச் செயலாளர் மு.கருணாநிதி, துணைச் செயலாளர...

தேனி மாவட்டத்தில் ரூ.112.67 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 28.5.2023 அன்று ரூ.32.01 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் ரூ.112.67 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 68 பயனாளிகளுக்கு ரூ.52.01 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் வரவேற்புரையாற்றினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, அவர்கள், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா,பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, ஆகியோர் திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள். விழாவில...

கம்பம் பகுதியில் ஆட்டம் காட்டும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்க நடவடிக்கை:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், மேகமலை கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைபுலிகள் காப்பக வனப்பகுதியில் சுற்றித்திரிந்த  ‘அரிக்கொம்பன்” என்ற ‘அரிசிக்கொம்பன்” என்னும் ஒற்றை காட்டுயானை 27.5.2023 அன்று அதிகாலை 5 மணியளவில் கம்பம், ‘ஹார்வெஸ்ட் பிரஷ் பார்ம்  ஸ்டே ரிசார்டில்” அருகில் இருந்து,  பின்னர் கம்பம் நகரத்திற்குள்  நுழைந்தது.      கம்பம் நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வரும் வழியில் வனத்துறையினரின் வாகனம் மற்றும் ஒரு ஆட்டோ வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளது. மேலும், யானையினை பார்ப்பதற்காக அந்த வழியில் சென்ற கம்பம், ஆசாரியார் தெருவைச் சேர்ந்த சடையாண்டி என்பவருடைய மகன் பால்ராஜ் என்பவரை தாக்கியதில் காயம் ஏற்பட்டு, அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தற்போது, யானையானது கம்பம் பைபாஸ் சாலைக்கு அருகில் தென்னந்தோப்பு பகுதியில் உள்ளது.  இப்பகுதியானது கம்பம் நகருக்கு மிக அருகில் உள்ள பகுதியாகும்.  மேலும், அரிக்கொம்பன் யானைக்கு மயக்க மருந்து செலுத்திட தேர்ந்த கால்நடை மருத்துவர்க...

தேனியில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

தேனி மாவட்டத்தில் உள்ள தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 427 பள்ளி வாகனங்கள் மற்றும் உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட 283 பள்ளி வாகனங்கள் என தேனி மாவட்டத்தில் மொத்தம் 710 பள்ளி வாகனங்கள் உள்ளன. இதில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம் 25.5.2023 அன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் வரவேற்றார். இந்த ஆய்வு முகாமின் போது பள்ளி வாகனங்கள் ஒழுங்குபடுத்துதல் கட்டுப்பாடு சிறப்பு விதிகள் 2012-ன்படி பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்கும் தகுதியில் உள்ளதாஎன்பதை கீழ்க்கண்டவாறு ஆய்வு செய்யப்பட்டது. அவசர கால வழி உள்ளதா, சரியாக இயங்குகிறதா? முதலுதவி பெட்டி சரியாக பராமரிக்கப்படுகிறதா? ஏறி இறங்கும் படிக்கட்டுகள் சரியாக உள்ளதா?தீயணைப்பான் கருவி சரியாக...

மேகமலை எஸ்டேட் ஓனர்ஸ் சங்கத்தினர் வனத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மதிவேந்தன் அவர்களை 19.5.23 அன்று மேகமலை எஸ்டேட் ஓனர்ஸ் சங்கத்தின் தலைவர் முத்துராமன், செயலாளர் ராஜேஸ்வரன் பொருளாளர் கண்ணன், உபதலைவர் சந்திரராஜா, உப செயலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளனர். தேனி மாவட்டம், மேகமலை மலை மேல் புலத்தில் விவசாயம் செய்து கொண்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை மனுவாக உங்களின் கணிவான பார்வைக்கு  சமர்ப்பிக்கின்றோம். அந்த மனுவில், தேனி மாவட்டம் மேகமலையில் விளையக்கூடிய காபி உலகத்தின் தரக் குறியீட்டில் இரண்டாம் இடம் வகிக்கின்றது. அதேபோல் ஏலக்காய் மிகவும் தரமானதாகவும் விளைகின்றது. இது போன்ற அந்நிய செலாவணியை ஈட்டு தரக்கூடிய விவசாயத்தையும் விவசாயிகளையும் முடக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் மேகமலை புலிகள் சரணாலய (DD) துணை இயக்குனர்  ஆனந்த் அதை உங்கள் முன் வகைப்படுத்துகின்றோம் மேகமலையில் சுமார் மூன்றாயிரம் (3,000) ஏக்கர் காப்பி, ஏலம், மிளகு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றது. இதில் செடிகளை அகற்றி இடை நாற்று நடுவதற்கு அர...

தேனி மாவட்டத்தில் 5 தாலுகா அலுவலகங்களில் நடந்த ஜமாபந்தியில் 649 கோரிக்கை மனுக்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி 17.5.2023 அன்று தொடங்கியது. இதில் போடிநாயக்கனூர் தாலுகா அலுவலகத்தில் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட இராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி  ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 18 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களையும், ஒரு பயனாளிக்கு ரூ.22,500-க்கான இயற்கை மரணம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், ஒரு பயனாளிக்கு ரூ.2,500 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், தேனி, உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய 5 தாலுகா பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகங்களில் 17.5.2023 முதல் 26.5.2023 வரை (19.05.2023 மற்றும் 22.05.2023 ஆகிய நாட்கள் நீங்க...

விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பள்ளி மாணவ/மாணவியர் சேர்க்கை: தேனி கலெக்டர் ஷஜீவனா தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் கீழ்கண்ட மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் : மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.  மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதிகள் : ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி, (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி. மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி - சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டர...

தேனி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரேசன் கடைகளில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவிற்குட்பட்ட எரசக்கநாயக்கனூர் ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சின்னமனூர் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் குறித்து 15.5.2023 அன்று மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் தாலுகாவிற்குட்பட்ட எரசக்கநாயக்கனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, மருந்து மாத்திரைகளில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து மாவட்ட கலெக்டர்  திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத்தொடர்...

தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக பவானி நியமனம்: மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக பழனிசெட்டிபட்டியை சேர்ந்த எம்.பவானி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை மகளிர் அணி அமைப்பாளராக நியமனம் செய்த தமிழ்நாடு முதல்வர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க இளைஞரணி செயலாளர், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க துணை பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எம்.பவானி நன்றிகளை தெரிவித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எம்.பவானி, தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தேனி நகர தி.மு.க அலுவலகத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது மகளிர் அணி துணைத்தலைவி ரெஜினா பேகம், துணை அமைப்பாளர்கள் ராதிகா, அழகுமணி, தி.மு.க சமூக வலைதள பொறுப்பாளர்கள் அனுசுயா, இந்துமதி மற்றும் தேனி...

தேனி மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் முகாமில் வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட 1439 வழக்குகளில் ரூ.5.37.87.966/- க்கு தீர்வு காணப்பட்டது.

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் முகாம் 13.5.2023 அன்று நடைபெற்றது. தேனி முதன்மை மாவட்ட நீதிபதி C.சஞ்சய் பாபா தலைமை தாங்கி தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார், தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் K.ராஜமோகன் வரவேற்றார். இந்த முகாமில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி S. கோபிநாதன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் V.சுரேஸ், நீதித்துறை நடுவர் R.லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி (விரைவு) (நீதித்துறை நடுவர் நிலை) K.ரமேஸ் மற்றும் வழக்கறிஞர்கள் ரதிதேவி, K.பாண்டியராஜன், A.பிரபாகர் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். அதுபோல பெரியகுளம் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் சாாபு நீதிபதி K.மாரியப்பன், நீதித்துறை நடுவர் K கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர் பி. சுந்தரராஜன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் மாவட்ட உரிமையியல் நீதிபதி A.சரவண செந்தில் குமார், நீதித்துறை நடுவர்(விரைவு) P. ரமேஷ். நீதித்துறை நடுவர் A.ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்...