Skip to main content

தேனி மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் முகாமில் வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட 1439 வழக்குகளில் ரூ.5.37.87.966/- க்கு தீர்வு காணப்பட்டது.

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் முகாம் 13.5.2023 அன்று நடைபெற்றது. தேனி முதன்மை மாவட்ட நீதிபதி C.சஞ்சய் பாபா தலைமை தாங்கி தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார், தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் K.ராஜமோகன் வரவேற்றார். இந்த முகாமில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி S. கோபிநாதன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் V.சுரேஸ், நீதித்துறை நடுவர் R.லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி (விரைவு) (நீதித்துறை நடுவர் நிலை) K.ரமேஸ் மற்றும் வழக்கறிஞர்கள் ரதிதேவி, K.பாண்டியராஜன், A.பிரபாகர் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதுபோல பெரியகுளம் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் சாாபு நீதிபதி K.மாரியப்பன், நீதித்துறை நடுவர் K கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர் பி. சுந்தரராஜன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உத்தமபாளையம் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் மாவட்ட உரிமையியல் நீதிபதி A.சரவண செந்தில் குமார், நீதித்துறை நடுவர்(விரைவு) P. ரமேஷ். நீதித்துறை நடுவர் A.ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர் S செல்வன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று ஆண்டிபட்டி கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நீதித்துறை நடுவர் T.பிச்சைராஜன் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர் B.அய்யப்பன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்,

போடிநாயக்கனூர் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் நீதித்துறை நடுவர் G.K.வேலுமயில் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர் P.கணேசன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம். பெரியகுளம், ஆண்டிபட்டி போடிநாயக்கனூர் ஆகிய நீதிமன்ற எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும். வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1439 வழக்குகளில் ரூ.5.37.87.966/- க்கு தீர்வு காணப்பட்டது.

 K.சரவணன், சிறப்பு நிருபர் 

Comments