Skip to main content

தேனி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரேசன் கடைகளில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவிற்குட்பட்ட எரசக்கநாயக்கனூர் ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சின்னமனூர் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் குறித்து 15.5.2023 அன்று மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் தாலுகாவிற்குட்பட்ட எரசக்கநாயக்கனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, மருந்து மாத்திரைகளில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து மாவட்ட கலெக்டர்  திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, சின்னமனூர் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் எடை அளவிடும் இயந்திரத்தில் முத்திரை பதிக்கப்பட்டுள்ள காலம், இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் நியாய விலைக்டையின் செயல்பாடுகள் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கிட விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.

R.பாண்டியன், உதவி ஆசிரியர் 


Comments