Skip to main content

Posts

Showing posts from October, 2024

தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய திமுக நிர்வாகி

தேனி, அக்.30- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட செல்வபுரம் பகுதி திமுக கழகம் சார்பில் கோவை செல்வபுரம் சமுதாய கூடத்தில் கோவை மாநகராட்சி 76, 77, 78, 79 ஆகிய வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் புத்தாடை இனிப்புகளை கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ.ரவி வழங்கினார். செல்வபுரம் பகுதி திமுக செயலாளர் கேபிள் மணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாமன்ற துணை மேயர் வெற்றி செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ராஜ்குமார், வசந்தாமணி மற்றும் வட்டக்கழக செயலாளர்கள்  அறிவழகன், ராஜேஷ், இப்ராகீம் மற்றும் வட்டக்கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் இளைஞரணியினர் பலர் கலந்து கொண்டனர். சீனிவாசன், உதவி ஆசிரியர் 

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி, அக்.30- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி 29.10.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர்கள் A.ராஜ்குமார், A.S.R.மகேஸ்வரன் ஆகியோர்கள் தலைமை தாங்கினர். கல்லூரியின் இணைச்செயலாளர் S.நவீன்ராம் முன்னிலை வகித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர். C.மதளைசுந்தரம்  மாணவர்களிடையே தீபாவளி பண்டிகையின் போது வெடி விபத்து அதிகரித்து வருவதை மாணவ மாணவியர்கள் கவனத்தில் கொண்டு மாசு விளைவிக்கும் பட்டாசுகளை தவிர்த்தல், அதிக சத்தத்துடன் கூடிய சரவெடிகளை தவிர்த்தல், கவனக்குறைவாக கையில் ஏந்தியபடி பட்டாசு வெடித்தலை தவிர்த்தல், மேலும் அரசு அறிவுறுத்திய குறிப்பிட்ட நேரங்களில் பட்டாசுகளை வெடித்து பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டுமென்றும், சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்களிடயே, வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ, அதை ஒன்று சேர்த்து கொளுத்துவதோ அறவே கூடாது. கையில் பட்டாசை பற்ற வைத்து தூக்கி எறிவதே தீ விபத்துக்கு முக்கிய காரணம். இதனால் நீங்கள் மட்...

தேனி கம்மவார் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

தேனி, அக்.27- தேனி மாவட்டம், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா 26.10.2024 அன்று நடைபெற்றது. விழாவுக்கு தேனி கம்மவார் சங்கம் துணைத்தலைவர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ செயலாளர் பெருமாள் சாமி முன்னிலை வகித்தார். ஐ.டி.ஐ முதல்வர் பிரகாசம் வரவேற்றார். விழாவில் தேனி கம்மவார் சங்கம் தலைவர் நம்பெருமாள் சாமி, செயலாளர் மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார்கள். விழாவில் தேனி கம்மவார் சங்க பொருளாளர் ரெங்கராஜ், இணைச்செயலாளர் ராஜா மன்னார், ஐ.டி.ஐ இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐ.டி.ஐ பொருளாளர் சுதாகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழாவை ஐ.டி.ஐ., ஏ.டி.ஓ அவினாஷ் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் கம்மவார் சங்க நிர்வாகிகள், ஐ.டி.ஐ., ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஐ.டி.ஐ., ஜே.டி.ஓ அழகுமலை நன்றி கூறினார். நாகராஜ், முதன்மை நிருபர் 

தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் 16 பேர் இயற்கை பேரிடர் காலங்களில் சேவை செய்ய ஆர்வம் : கலெக்டரிடம் பெயர் பட்டியலை மனுவாக அளித்தனர்

தேனி, அக்.25- தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது மட்டுமன்றி கோவில் உழவார பணிகள், கோவில் பிரச்சனைகள், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன் ரவி, தேனி மாவட்ட தலைவர் ராம்ராஜ் ஆகியோர் ஆலோசனையின்படி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் ஆகிய  இராமமூர்த்தி  9486225858, செல்வபாண்டியன் 9842424082, இராஜேஷ்குமார் 9865133558, சிவராமன் 9698476263, சிவா 9500845456, எல்.ஆர்.புயல்அய்யப்பன் 7418933436, தினேஷ்குமார்  9894232981, கனகுபாண்டி  6383932323, , ரெங்கராஜ்  9025644516, சீனிவாசன்  9994877609, பாலா 8428022145,  அழகுபாண்டி 9944787874, ராமகிருஷ்ணன் 8680917720,  மணிபிரபு 9790120511, மணிகண்டன் 8428903105, சரவணன் 9894444063 ஆகிய 16 பேரும...

தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில், தமிழக வனத்துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது

கோவை, அக்.23- தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வனத்துறை அணிகள்  பங்கேற்ற ,கைப்பந்து போட்டியில், தமிழக வனத்துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது சாதனை படைத்தனர். சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் அகில இந்திய வனத்துறையினர்கள் சார்பில் பல்வேறு மாநில வனத்துறை  அணி வீரர்கள் பங்கேற்ற கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது, இப்போட்டிகள் கடந்த 16-ம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிர, உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அரியானா போன்ற மாநிலங்களை சோ்ந்த 22 கைப்பந்து அணிகள் பங்கேற்றன. இதில், நாமக்கல் மாவட்ட வன அலுவலா் கலாநிதி தலைமையில் தமிழக வனத் துறையை சோ்ந்த விளையாட்டு  வீரா்கள் பங்கேற்றனா். கூடலூா் மரப்பாலம் கோட்டம், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை சோ்ந்த மகா கிருஷ்ணன் என்பவரும் இதில் பங்கேற்று விளையாடினாா். பல போட்டிகளில் தொடர்ந்து வென்ற தமிழக வனத்துறை அணியினர் , இறுதி ஆட்டத்தில் கா்நாடகா மாநில வனத்துறை அணி வீரர்களுடன், தமிழக வனத்துறை அணி வீரர்கள் விளையாடினர்.  இவற்றில் தமிழக வனத்...

போடி நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

தேனி, அக்.23- தேனி மாவட்ட கலெக்டர் அவர்களின் உத்தரவின் பேரில், நகராட்சி துறையும் கால்நடை பராமரிப்பு துறையும் இணைந்து, போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறி நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  இந்த பணிகளை நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், நகராட்சி ஆணையாளர் பார்கவி ஆகியோர் பார்வையிட்டனர்.  அப்போது சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். சசி துரை, சிறப்பு நிருபர் 

ஆண்டிபட்டியில் பெய்த கனமழையால் பள்ளிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது: ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்து அடியோடு முடக்கம்

தேனி, அக்.21- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து ஏத்தக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்க பாதை உள்ளது. இந்த சாலை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆண்டிபட்டியில் பெய்த கனமழையின் காரணத்தால் மழைநீர் ரயில் சுரங்க பாதையில் நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பள்ளி மாணவிகளும், பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.  இதற்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் சம்மந்தப்பட்ட நிர்வாகம் திணறி வருகிறது. மழை காலம் வந்தால் மட்டுமே இந்த மழைநீர் தேங்கும் பிரச்சினை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதால் மற்ற நேரங்களில் காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறையும் ரயில்வேத்துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும். உனக்கு வலித்தால் எனக்கென்ன என்கிற மனப்பாங்கு வெற்றி பெறாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதற்கிடையே ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை பேரூராட்சி பணியாளர்களும், வருவாய்த்துறையும் இணைந்து வெளியேற்றினர். சசி துரை, சிறப்பு நிருபர் 

தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

தேனி, அக்.20- தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 83-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் 19.10..2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார்.  உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் கே.பி.ஆர் முருகன் வரவேற்றார். விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், மதுரை தேவகி மருத்துவமனை நிர்வாக இயக்குனமான டாக்டர் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது பள்ளிக்கால நினைவுகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டு பேசினார். இதனை அடுத்து விழாவில் தமிழ்நாடு அரசிடம் இருந்து நல்லாசிரியர் விருது பெற்ற நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் மற்றும் தேனி நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பூரண செல்வி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களைய...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் மாவட்ட அதிகார மையத்தின் திட்டங்கள் மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி, அக்.19- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட அதிகார மையத்தின் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் மகேஸ்வரன், கல்லூரியின் இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதலாமாண்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா வரவேற்புரையாற்றினார்.  கல்லூரியின் முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம், இந்நிகழ்ச்சியின் நோக்கத்தை பற்றி மாணவ மாணவிகளிடையே எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் போக்சோ குழு வழக்கறிஞர் M.சசிகலா செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள், வரதட்சனை தடுப்பு சட்டம், திருமண பதிவு சட்டம், மூத்தகுடி மக்களுக்கான பாதுகாப்பு சட்டம், மற்றும் பெண்கள் பணிபுரியும் இடத்தில் ஏற்படும் பாலியியல் தொந்தரவு பற்றியும், பெண் குழந்தைகளுக்கான பாலியியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை, தண்டனை சட்டம் ஆ...

தேனியில் அ.தி.மு.க 53-வது ஆண்டு தொடக்க விழா : இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேனி, அக்.17- தேனி நகர அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.கழகத்தின் 53-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி தேனி-பெரியகுளம் சாலை ரயில்வே கேட் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி நகர அ.தி.மு.க செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். தேனி நகர துணைச்செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருஉருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து, கட்சி கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் தேனி நகர் கழக நிர்வாகிகள் டெய்லர் முருகேசன், வீரமணி, கண்ணன், ராதாகிருஷ்ணன், லட்சுமி, பாக்கியம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட அணி செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், தனலட்சுமி, சுரேஷ், தினேஷ்குமார், தேனி நகர அணி செயலாளர்கள் பிரகாஷ், அமுதவள்ளி, லியாகத் அலிகான், பாண்டி உள்பட அ.தி.மு.க-வினர் பலர் கலந்து கொண்டனர். நாகராஜ், முதன்மை நிருபர் 

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு பேட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்

கோவை, அக்.16- கோவையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே மாவட்ட அளவிலான  தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பற்றி கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது.  இதில் அரசு மற்றும் தனியார் 12 பள்ளிகளில் இருந்து  மாணவ, மாணவிகள் 60-க்கும் மேற்பட்டவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இதே போன்று 15 கல்லூரிகளில் இருந்து 70-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த போட்டிகளின் இறுதி சுற்று அரசு கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. இதில் பள்ளி அளவில் பீச்சனூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவி மு.ஜனாஸ்ரீ முதல் இடத்தையும், கல்லூரி அளவில் ஈஷா பொறியியல் கல்லூரி மாணவர் கு.சந்தனபாண்டியன் முதல் இடத்தையும் பிடித்தனர். இதில் பள்ளி அளவிலான சிறப்பு பரிசினை தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.நிவேதா பெற்றார். இவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் காசோலையுடன், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.  மேலும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் பேச்சு போட்டியு...

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் முகாம்

தேனி, அக்.16- தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உத்தமபாளையம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  அதன் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சின்னமனூர் எம்.எம்.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் இரவங்கலார், மகாராஜா மெட்டு, வெண்ணியார், மணலார், மேல்மணலார், ஹைவேவிஸ் மற்றும் மேகமலை ஆகிய மலை கிராமங்களில் உள்ள மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்வின் போது வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மக்களிடம் மனுக்கள் பெற்றனர். அதுபோல மகளிர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் தேவபிரதிக் மற்றும் பணியாளர்கள் நிகழ்வில் பங்கேற்று போர்வைகள் வழங்கினர். சசி துரை, சிறப்பு நிருபர்  

ஆண்டிபட்டி பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை: தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

ஆண்டிபட்டி, அக்.15- தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் ஆலோசனையின்படி, ஆண்டிபட்டி டி.எஸ்.பி.சண்முகம் அறிவுறுத்தலின் பேரில் ஆண்டிபட்டி வட்டாரத்தில்  ஆண்டிபட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதி நாதன் தலைமையில் போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த  பணியாளர்கள் சோதனை  நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டிபட்டி பகுதியில் 2 கடைகள் கண்டமனூர் பகுதியில் 2 கடைகள், கடமலைக்குண்டு பகுதியில் 2 கடைகள் மயிலாடும்பாறை பகுதியில் 1 கடை மற்றும் ராஜதானி பகுதியில் 3 கடைகள் என மொத்தம் 10 கடைகள் வரை உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கையில் இறங்கினர்.  இந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களுக்கு  ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.  அதுபோல சுத்தமில்லாமல் கறிக்கடை வைத்து இறைச்சி விற்பனை செய்தவர்கள் கறிக்கடைகளும் அபராதம் விதிக்கப்பட்டத...

பாளையங்கோட்டையில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் : போர்க்கால அடிப்படையில் கழிவுகளை அகற்ற பந்தல் ராஜா தலைமையில் பொதுமக்கள் போராட்டம்

திருநெல்வேலி, அக்.15- திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை 6-வது வார்டுக்கு உட்பட்ட அ ண்ணா தெரு மற்றும் அம்பேத்கர் காலனி பின்புறத்தில் பாளையங்கோட்டை சுற்று வட்டார பல வார்டுகளில் இருந்து அன்றாட மக்கள் பயன்படுத்தும் கழிவுகளை அண்ணா தெரு பகுதியில் மலை போல் குவித்து வைத்து அள்ளி செல்கிறார்கள்.  இ தனால் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதன் காரணமாக டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் அப்பகுதி மக்களுக்கு அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் 15.10.2024 அன்று குப்பை கொட்ட வந்த லாரியை வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே திருநெல்வேலி மாநகராட்சி இனி மழை காலம் என்பதால் போர்க்கால அடிப்படையில் உடனடியாக  கழிவுகளை அகற்றிடவும், இனிவரும் காலங்களில் அங்கு கழிவுகளை கொட்டாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகராஜ், முதன்மை நிருபர் 

பாரதியார் பல்கலைக்கழக 39-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்பு

கோவை, அக்.15- கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா முனைவர் உஷா கீர்த்திலால் மேத்தா பேரவை அரங்கில் நடைபெற்றது. விழாவில்  தமிழ்நாடு ஆளுநரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவை தலைமையேற்று நடத்தினார். உயர்கல்வித்துறை அமைச்சரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான முனைவர் கோவி. செழியன் பங்கேற்று சிறப்பித்தார்.  விழாவில் ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேரா B.S.மூர்த்தி பட்டமளிப்பு விருந்தினராக கலந்து கொண்டார், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலரும், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான  கோபால் வரவேற்றார்  விழாவில் 1,622 முனைவர் பட்ட ஆய்வாளர்களும் முதுநிலை மற்றும் இளநிலைப் பட்டங்களில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 298 மாணவர்களும் பட்டங்களையும், தங்கப்பதக்கங்களையும் நேரடியாக பெற்றனர். பட்டமளிப்பு விழாவில்  279 ஆய்வியல் நிறைஞர், 42,312 முதுநிலைப் பட்டப்படிப்பு, 1,17,233 இளநிலை பட்டப்படிப்பு 1,172 முதுநிலை பட்டயப்படிப்பு என மொத்தம் 1,62,618 மாணவர்களுக்கான ப...

தீபாவளி பண்டிகை தினத்தன்று மதுகடைகளை மூட வேண்டும் : சிவசேனா கட்சியினர் உடலில் கட்டுபோட்டு கொண்டு நூதன முறையில் சென்று தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, அக்.14- தீபாவளி பண்டிகையையொட்டி மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரி சிவசேனா கட்சி சார்பில் தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர் கருப்பையா ஆகியோர் தலைமையில் விபத்தில் காயமடைந்தவர் கட்டு போட்டு இருப்பது போல் நூதன முறையில் சென்று தேனி மாவட்ட கலெக்டரிடம் 14.10.2024 அன்று கோரிக்கை மனு அளித்தனர்.  அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, வருகின்ற அக்.31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நன்நாளில் பொதுமக்கள் அனைவரது வீட்டிலும் குடும்ப உறுப்பினர்களுடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம், ஆனால் இப்பண்டிகை தினத்தில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படுவதால் அநேக ஆடவர்கள் மது அருந்திவிட்டு வெளியிடங்களுக்கு வாகனத்தை ஓட்டி செல்வதால் கோர விபத்துகள் ஏற்படுவதோடு, குடும்பங்களிலும் வன்முறை  நிகழ்ந்து வருகிறது. பண்டிகை தினத்தின் தான் விபத்துகள் அளவுக்கு அதிகமாக நடைபெறுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.  ஆகவே தமிழக முதல்வர் தீபாவளி தினத்தன்று மற்றும் முன்தினம், பின் தினம் என 3 தினங்கள் விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதிலும் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அ...

தேனியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

தேனி, அக்.14- தேனியில் அ.தி.மு.கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தேனி நகர அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தேனி அம்பிவெங்கிடசாமி திருமண மண்டபத்தில் 14.10.2024 அன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு தேனி நகர செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். தேனி நகர துணைச்செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். தேனி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன்செல்லப்பா  எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர்  ஜெயக்குமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், தலைமை கழக பேச்சாளர் வடுகை.சுந்தரபாண்டியன் உள்பட மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தேனி நகர, சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  முடிவில் தேனி கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ...

அடிப்படை வசதிகள் நிறைவேற்றியதாக பொய்யான அறிக்கை தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

கோவை, அக்.14- கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலங்கல் ஊராட்சி 4-வது வார்டில் தென்றல் நகர் குடியிருப்பு பகுதி கடந்த 2015-ம் ஆண்டு முதல் உருவாகி 165-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டி, குடியிருந்து வருகின்றனர்.  இந்த வீடுகளுக்கு உரிய சொத்து வரிகள் விதித்து, குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய்க்கான வசதிகள் செய்து தருவதாக கலங்கல் ஊராட்சியில் வரி வசூல் செய்தனர், ஆனால் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகள் செய்து தராமல் ஏமாற்றி வருவதாக பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கலங்கல் ஊராட்சி, தென்றல் நகர் குடியிருப்பு மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர். அதன்படி பதில் அளித்த சூலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், கலங்கல் ஊராட்சி கிராமத்தில் உள்ள தென்றல் நகர் குடியிருப்பு பகுதிக்கு முறையாக குடிநீர் வசதிகள் செய்து தந்ததாக அறிக்கை  அனுப்பினார். இதனை கண்ட குடியிருப்பு மக்கள் அதிர்ச்சி அடைந்து இதை கண்டித்தும், பொய்யான அறிக்கையாக, அடிப்படை வசதிகளும், குறிப்பாக குடிநீர் வசதி கடந்த 10 ஆண்டுகளாக செய்து தராமல், ஏமாற்றி வ...

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, ரிசல்ட் தேதி வெளியீடு : கோவையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட்டார்

கோவை, அக்.14- கோவை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பள்ளி கல்வி துறை இயக்குனர், பள்ளிக்கல்வி தேர்வு பிரிவு இயக்குனர் ராமசாமி, மற்றும்,மாவட்ட பள்ளி கல்வி துறை அலுவலர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனுடன் செய்தியாளர்களை சந்தித்து, 2024-2025 ம் ஆண்டுக்குரிய நடப்பு கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.  இதில் 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு 2025-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம்தேதி தொடங்கி 14-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு பிப்ரவரி 15-ம் தேதி  தொடங்கி 21-ம் தேதியும், 10-ம்வகுப்புக்கு பிப்ரவரி 22-ம்தேதி தொடங்கி 28-ம்தேதி செய்முறை தேர்வுகள் நடத்தபடும் என்றார். இதனைத்தொடர்ந்து 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிட்டார். அதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம்தேதி தொடங்கி 25-ம்தேதியும், 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 27-ம் தேதிவரையும், 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு 25-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம்தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்...

தேனியில் தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம் நூல் அறிமுக விழா

தேனி, அக்.13- தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு சார்பில் முனைவர் க.கருத்தப்பாண்டி எழுதிய தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம் என்ற நூல் அறிமுக விழா தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில் 13.10.2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி பன்முகமேடை பதிப்பக நிறுவனர் விசாகன் தலைமை தாங்கினார். வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ், அகில இந்திய பார்வர்டு பிளாக் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, தேனி மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர், மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம். முத்துராமலிங்கம் நூலை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்  விழாவின் போது கோவில்பட்டி சிந்து முருகன் கன்ஸ்ட்ரக்சன் பொது மேலாளர் க.கருத்தப்பாண்டி நூலினை ஏற்புரை செய்தார்.  விழா நிகழ்ச்சியை தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம் தொகுத்து வழங்கினார். விழாவில் தேனி தமிழ் சங்க மாவட்ட தலைவர் பொன்முடி, அகில இந்திய பார்வர்டு பிளாக் தேனி மாவட்ட தலைவர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்ட...