Skip to main content

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் மாவட்ட அதிகார மையத்தின் திட்டங்கள் மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி, அக்.19-

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட அதிகார மையத்தின் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் மகேஸ்வரன், கல்லூரியின் இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதலாமாண்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா வரவேற்புரையாற்றினார். 

கல்லூரியின் முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம், இந்நிகழ்ச்சியின் நோக்கத்தை பற்றி மாணவ மாணவிகளிடையே எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் போக்சோ குழு வழக்கறிஞர் M.சசிகலா செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள், வரதட்சனை தடுப்பு சட்டம், திருமண பதிவு சட்டம், மூத்தகுடி மக்களுக்கான பாதுகாப்பு சட்டம், மற்றும் பெண்கள் பணிபுரியும் இடத்தில் ஏற்படும் பாலியியல் தொந்தரவு பற்றியும், பெண் குழந்தைகளுக்கான பாலியியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை, தண்டனை சட்டம் ஆகியவற்றை பற்றியும் மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைத்து வழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மங்கையர் திலகம் கலந்து கொண்டு குழந்தை திருமண தடை சட்டம். போக்சோ தடைச்சட்டம், ஆகியவற்றை பற்றி விளக்கினார். குழந்தை திருமணம், குழந்தைகளுக்கான எதிரான பாலியியல் வன்கொடுமை பற்றிய புகார்களுக்கு 1098 மற்றும், அனைத்து விதமான புகார்களுக்கு உதவி எண் 100 தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் என்றும், மணவர்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் தேனி சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தின் அலுவலர் தீபா மற்றும் மாவட்ட பாலின நிபுணர் வெற்றிவேல் ஆகியோர்கள் கலந்து கொண்டு தேசிய பெண்கள் பாதுகாப்பு புகார் எண் 181. சமூக நலன் பாதுகாப்பு திட்டத்தில் தமிழ்புதல்வன். புதுமைபெண், ஆகிய திட்டங்கள் பற்றியும் நேரடி உதவித்தொகை பெறும் முறைகள், இரண்டு பெண் குழந்தை திட்டம், திருமண நிதியுதவி திட்டம், விதவை மகள் உதவி திட்டம் ஆகிய திட்டங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பயன்பெறும் முறைகள் குறித்து விளக்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P. கணேஷ், பொதுச்செயலாளர் M.M. ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர்கள் மாதவன். சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர், கார்த்திகேயன், கல்லூரியின் பாலியியல் துன்புறுத்தல் தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள், முதலாமாண்டு துறைத்தலைவர் பிரதாப் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கணிதவியல் துறையின் பேராசிரியர் மகாலட்சுமி அவர்கள் நன்றி கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments