Skip to main content

தீபாவளி பண்டிகை தினத்தன்று மதுகடைகளை மூட வேண்டும் : சிவசேனா கட்சியினர் உடலில் கட்டுபோட்டு கொண்டு நூதன முறையில் சென்று தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, அக்.14-

தீபாவளி பண்டிகையையொட்டி மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரி சிவசேனா கட்சி சார்பில் தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர் கருப்பையா ஆகியோர் தலைமையில் விபத்தில் காயமடைந்தவர் கட்டு போட்டு இருப்பது போல் நூதன முறையில் சென்று தேனி மாவட்ட கலெக்டரிடம் 14.10.2024 அன்று கோரிக்கை மனு அளித்தனர். 

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, வருகின்ற அக்.31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நன்நாளில் பொதுமக்கள் அனைவரது வீட்டிலும் குடும்ப உறுப்பினர்களுடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம், ஆனால் இப்பண்டிகை தினத்தில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படுவதால் அநேக ஆடவர்கள் மது அருந்திவிட்டு வெளியிடங்களுக்கு வாகனத்தை ஓட்டி செல்வதால் கோர விபத்துகள் ஏற்படுவதோடு, குடும்பங்களிலும் வன்முறை  நிகழ்ந்து வருகிறது. பண்டிகை தினத்தின் தான் விபத்துகள் அளவுக்கு அதிகமாக நடைபெறுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

ஆகவே தமிழக முதல்வர் தீபாவளி தினத்தன்று மற்றும் முன்தினம், பின் தினம் என 3 தினங்கள் விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதிலும் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்திட வேண்டுமென தமிழக முதல்வர்கள் அவர்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் வழியாக அனுப்பி வைக்க சிவசேனா கட்சியின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் போது தேனி மாவட்ட செயலாளர்கள் பாலமுருகன், கண்ணன், பொருளாளர் கணேசன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன், ஒன்றிய தலைவர் ரெங்கநாதன் மற்றும் மாவட்ட,  நகர, ஒன்றிய, இளைஞரணி பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments