தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, ரிசல்ட் தேதி வெளியீடு : கோவையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட்டார்
கோவை, அக்.14-
கோவை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பள்ளி கல்வி துறை இயக்குனர், பள்ளிக்கல்வி தேர்வு பிரிவு இயக்குனர் ராமசாமி, மற்றும்,மாவட்ட பள்ளி கல்வி துறை அலுவலர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனுடன் செய்தியாளர்களை சந்தித்து, 2024-2025 ம் ஆண்டுக்குரிய நடப்பு கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.
இதில் 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு 2025-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம்தேதி தொடங்கி 14-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியும், 10-ம்வகுப்புக்கு பிப்ரவரி 22-ம்தேதி தொடங்கி 28-ம்தேதி செய்முறை தேர்வுகள் நடத்தபடும் என்றார்.
இதனைத்தொடர்ந்து 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிட்டார். அதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம்தேதி தொடங்கி 25-ம்தேதியும், 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 27-ம் தேதிவரையும், 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு 25-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம்தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றார்.
அதுபோல 10, 11, 12-ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்க்கான தேதியும் வெளியிட்டார், இதில் 12-ம் வகுப்புக்கு மே மாதம் 9-ம்தேதி, 11-ம்வகுப்பு, 10-ம்வகுப்புக்கு மே மாதம் 19-ம்தேதி பொதுத்தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் மழை காலம் தொடங்கி விட்டதால், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்க்கொண்டு வருகின்றோம். அதில் பழைய கட்டிட வகுப்பு அறைகள் கண்டு அறிந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மத்திய அரசு தமிழக அரசுக்கு முறையாக தமிழக பள்ளி கல்வி துறைக்கு தர வேண்டிய நிதியை தாமதபடுத்தினாலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூடுதல் நிதி வழங்கி உள்ளார் என்று பேசினார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
செல் : 9976760379
Comments