தேனி, அக்.20-
தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 83-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் 19.10..2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் கே.பி.ஆர் முருகன் வரவேற்றார்.
விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், மதுரை தேவகி மருத்துவமனை நிர்வாக இயக்குனமான டாக்டர் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது பள்ளிக்கால நினைவுகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டு பேசினார்.
இதனை அடுத்து விழாவில் தமிழ்நாடு அரசிடம் இருந்து நல்லாசிரியர் விருது பெற்ற நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் மற்றும் தேனி நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பூரண செல்வி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் பாராட்டி கேடயம் மற்றும் பரிசுகள் வழக்கப்பட்டது. விழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments