பாளையங்கோட்டையில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் : போர்க்கால அடிப்படையில் கழிவுகளை அகற்ற பந்தல் ராஜா தலைமையில் பொதுமக்கள் போராட்டம்
திருநெல்வேலி, அக்.15-
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை 6-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா தெரு மற்றும் அம்பேத்கர் காலனி பின்புறத்தில் பாளையங்கோட்டை சுற்று வட்டார பல வார்டுகளில் இருந்து அன்றாட மக்கள் பயன்படுத்தும் கழிவுகளை அண்ணா தெரு பகுதியில் மலை போல் குவித்து வைத்து அள்ளி செல்கிறார்கள்.
இதனால் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதன் காரணமாக டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் அப்பகுதி மக்களுக்கு அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் 15.10.2024 அன்று குப்பை கொட்ட வந்த லாரியை வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே திருநெல்வேலி மாநகராட்சி இனி மழை காலம் என்பதால் போர்க்கால அடிப்படையில் உடனடியாக கழிவுகளை அகற்றிடவும், இனிவரும் காலங்களில் அங்கு கழிவுகளை கொட்டாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments