Skip to main content

ஆண்டிபட்டி பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை: தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

ஆண்டிபட்டி, அக்.15-

தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் ஆலோசனையின்படி, ஆண்டிபட்டி டி.எஸ்.பி.சண்முகம் அறிவுறுத்தலின் பேரில் ஆண்டிபட்டி வட்டாரத்தில் ஆண்டிபட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதி நாதன் தலைமையில் போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த  பணியாளர்கள் சோதனை 
நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆண்டிபட்டி பகுதியில் 2 கடைகள் கண்டமனூர் பகுதியில் 2 கடைகள், கடமலைக்குண்டு பகுதியில் 2 கடைகள் மயிலாடும்பாறை பகுதியில் 1 கடை மற்றும் ராஜதானி பகுதியில் 3 கடைகள் என மொத்தம் 10 கடைகள் வரை உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கையில் இறங்கினர். 
இந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. 
அதுபோல சுத்தமில்லாமல் கறிக்கடை வைத்து இறைச்சி விற்பனை செய்தவர்கள் கறிக்கடைகளும் அபராதம் விதிக்கப்பட்டதுடன் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சசி துரை, சிறப்பு நிருபர் 

Comments