Skip to main content

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு பேட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்


கோவை, அக்.16-

கோவையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே மாவட்ட அளவிலான  தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பற்றி கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது. 
இதில் அரசு மற்றும் தனியார் 12 பள்ளிகளில் இருந்து  மாணவ, மாணவிகள் 60-க்கும் மேற்பட்டவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

இதே போன்று 15 கல்லூரிகளில் இருந்து 70-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளின் இறுதி சுற்று அரசு கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. இதில் பள்ளி அளவில் பீச்சனூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவி மு.ஜனாஸ்ரீ முதல் இடத்தையும், கல்லூரி அளவில் ஈஷா பொறியியல் கல்லூரி மாணவர் கு.சந்தனபாண்டியன் முதல் இடத்தையும் பிடித்தனர். இதில் பள்ளி அளவிலான சிறப்பு பரிசினை தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.நிவேதா பெற்றார். இவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் காசோலையுடன், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். 
மேலும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் பேச்சு போட்டியும், தமிழ் நாடு நாள் விழா கொண்டாட்டத்தை ஓட்டி கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது, இதில் 22 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலையுடன், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் நடுவர்களாக பள்ளி தமிழ் துறை ஆசிரியைகளும், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு போட்டியாளர்களை தேர்வு செய்தனர். 
வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் இரா.அன்பரசி பரிசும், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள், நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்,

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments