Skip to main content

Posts

Showing posts from May, 2023

தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு சட்டபேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் 31.5.2023 அன்று ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக  வளர்ச்சி  அலுவலக கூட்டரங்கில் அரசு துறைகளின் கீழ் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் /  பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில், மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, உறுதிமொழி குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.அருள் (சேலம் மேற்கு), ஐ.கருணாநிதி (பல்லாவரம்), எம்.சக்கரபாணி (வானூர்), எம்.கே.மோகன்  (அண்ணா நகர்),  பி.ராமலிங்கம் (நாமக்கல்) சட்டப்பேரவை செயலாளர்  கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்  கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, சட்டமன்ற பேரவையின் இணைச் செயலாளர் மு.கருணாநிதி, துணைச் செயலாளர...

தேனி மாவட்டத்தில் ரூ.112.67 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 28.5.2023 அன்று ரூ.32.01 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் ரூ.112.67 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 68 பயனாளிகளுக்கு ரூ.52.01 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் வரவேற்புரையாற்றினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, அவர்கள், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா,பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, ஆகியோர் திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள். விழாவில...

கம்பம் பகுதியில் ஆட்டம் காட்டும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்க நடவடிக்கை:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், மேகமலை கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைபுலிகள் காப்பக வனப்பகுதியில் சுற்றித்திரிந்த  ‘அரிக்கொம்பன்” என்ற ‘அரிசிக்கொம்பன்” என்னும் ஒற்றை காட்டுயானை 27.5.2023 அன்று அதிகாலை 5 மணியளவில் கம்பம், ‘ஹார்வெஸ்ட் பிரஷ் பார்ம்  ஸ்டே ரிசார்டில்” அருகில் இருந்து,  பின்னர் கம்பம் நகரத்திற்குள்  நுழைந்தது.      கம்பம் நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வரும் வழியில் வனத்துறையினரின் வாகனம் மற்றும் ஒரு ஆட்டோ வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளது. மேலும், யானையினை பார்ப்பதற்காக அந்த வழியில் சென்ற கம்பம், ஆசாரியார் தெருவைச் சேர்ந்த சடையாண்டி என்பவருடைய மகன் பால்ராஜ் என்பவரை தாக்கியதில் காயம் ஏற்பட்டு, அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தற்போது, யானையானது கம்பம் பைபாஸ் சாலைக்கு அருகில் தென்னந்தோப்பு பகுதியில் உள்ளது.  இப்பகுதியானது கம்பம் நகருக்கு மிக அருகில் உள்ள பகுதியாகும்.  மேலும், அரிக்கொம்பன் யானைக்கு மயக்க மருந்து செலுத்திட தேர்ந்த கால்நடை மருத்துவர்க...

தேனியில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

தேனி மாவட்டத்தில் உள்ள தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 427 பள்ளி வாகனங்கள் மற்றும் உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட 283 பள்ளி வாகனங்கள் என தேனி மாவட்டத்தில் மொத்தம் 710 பள்ளி வாகனங்கள் உள்ளன. இதில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம் 25.5.2023 அன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் வரவேற்றார். இந்த ஆய்வு முகாமின் போது பள்ளி வாகனங்கள் ஒழுங்குபடுத்துதல் கட்டுப்பாடு சிறப்பு விதிகள் 2012-ன்படி பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்கும் தகுதியில் உள்ளதாஎன்பதை கீழ்க்கண்டவாறு ஆய்வு செய்யப்பட்டது. அவசர கால வழி உள்ளதா, சரியாக இயங்குகிறதா? முதலுதவி பெட்டி சரியாக பராமரிக்கப்படுகிறதா? ஏறி இறங்கும் படிக்கட்டுகள் சரியாக உள்ளதா?தீயணைப்பான் கருவி சரியாக...

மேகமலை எஸ்டேட் ஓனர்ஸ் சங்கத்தினர் வனத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மதிவேந்தன் அவர்களை 19.5.23 அன்று மேகமலை எஸ்டேட் ஓனர்ஸ் சங்கத்தின் தலைவர் முத்துராமன், செயலாளர் ராஜேஸ்வரன் பொருளாளர் கண்ணன், உபதலைவர் சந்திரராஜா, உப செயலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளனர். தேனி மாவட்டம், மேகமலை மலை மேல் புலத்தில் விவசாயம் செய்து கொண்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை மனுவாக உங்களின் கணிவான பார்வைக்கு  சமர்ப்பிக்கின்றோம். அந்த மனுவில், தேனி மாவட்டம் மேகமலையில் விளையக்கூடிய காபி உலகத்தின் தரக் குறியீட்டில் இரண்டாம் இடம் வகிக்கின்றது. அதேபோல் ஏலக்காய் மிகவும் தரமானதாகவும் விளைகின்றது. இது போன்ற அந்நிய செலாவணியை ஈட்டு தரக்கூடிய விவசாயத்தையும் விவசாயிகளையும் முடக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் மேகமலை புலிகள் சரணாலய (DD) துணை இயக்குனர்  ஆனந்த் அதை உங்கள் முன் வகைப்படுத்துகின்றோம் மேகமலையில் சுமார் மூன்றாயிரம் (3,000) ஏக்கர் காப்பி, ஏலம், மிளகு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றது. இதில் செடிகளை அகற்றி இடை நாற்று நடுவதற்கு அர...

தேனி மாவட்டத்தில் 5 தாலுகா அலுவலகங்களில் நடந்த ஜமாபந்தியில் 649 கோரிக்கை மனுக்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி 17.5.2023 அன்று தொடங்கியது. இதில் போடிநாயக்கனூர் தாலுகா அலுவலகத்தில் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட இராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி  ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 18 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களையும், ஒரு பயனாளிக்கு ரூ.22,500-க்கான இயற்கை மரணம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், ஒரு பயனாளிக்கு ரூ.2,500 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், தேனி, உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய 5 தாலுகா பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகங்களில் 17.5.2023 முதல் 26.5.2023 வரை (19.05.2023 மற்றும் 22.05.2023 ஆகிய நாட்கள் நீங்க...

விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பள்ளி மாணவ/மாணவியர் சேர்க்கை: தேனி கலெக்டர் ஷஜீவனா தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் கீழ்கண்ட மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் : மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.  மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதிகள் : ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி, (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி. மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி - சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டர...

தேனி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரேசன் கடைகளில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவிற்குட்பட்ட எரசக்கநாயக்கனூர் ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சின்னமனூர் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் குறித்து 15.5.2023 அன்று மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் தாலுகாவிற்குட்பட்ட எரசக்கநாயக்கனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, மருந்து மாத்திரைகளில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து மாவட்ட கலெக்டர்  திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத்தொடர்...

தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக பவானி நியமனம்: மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக பழனிசெட்டிபட்டியை சேர்ந்த எம்.பவானி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை மகளிர் அணி அமைப்பாளராக நியமனம் செய்த தமிழ்நாடு முதல்வர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க இளைஞரணி செயலாளர், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க துணை பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எம்.பவானி நன்றிகளை தெரிவித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எம்.பவானி, தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தேனி நகர தி.மு.க அலுவலகத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது மகளிர் அணி துணைத்தலைவி ரெஜினா பேகம், துணை அமைப்பாளர்கள் ராதிகா, அழகுமணி, தி.மு.க சமூக வலைதள பொறுப்பாளர்கள் அனுசுயா, இந்துமதி மற்றும் தேனி...

தேனி மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் முகாமில் வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட 1439 வழக்குகளில் ரூ.5.37.87.966/- க்கு தீர்வு காணப்பட்டது.

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் முகாம் 13.5.2023 அன்று நடைபெற்றது. தேனி முதன்மை மாவட்ட நீதிபதி C.சஞ்சய் பாபா தலைமை தாங்கி தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார், தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் K.ராஜமோகன் வரவேற்றார். இந்த முகாமில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி S. கோபிநாதன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் V.சுரேஸ், நீதித்துறை நடுவர் R.லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி (விரைவு) (நீதித்துறை நடுவர் நிலை) K.ரமேஸ் மற்றும் வழக்கறிஞர்கள் ரதிதேவி, K.பாண்டியராஜன், A.பிரபாகர் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். அதுபோல பெரியகுளம் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் சாாபு நீதிபதி K.மாரியப்பன், நீதித்துறை நடுவர் K கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர் பி. சுந்தரராஜன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் மாவட்ட உரிமையியல் நீதிபதி A.சரவண செந்தில் குமார், நீதித்துறை நடுவர்(விரைவு) P. ரமேஷ். நீதித்துறை நடுவர் A.ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்...

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, வேலைவாய்ப்பு அலுவலகம், ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட விளையாட்டு மைதானம், ஆயுதப்படை விளையாட்டு மைதானம் வரை பாதையில் இருபுறமும் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் C.மதளைசுந்தரம், துணை முதல்வர் N.மாதவன், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் R.பிரதீப்குமார், ஒருங்கிணைப்பாளர் B.நாகராஜன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆயுதப்படை விளையாட்டு மைதானம் வரை பொது மக்களுக்கு இடையூராக இருந்த கருவேல மரங்கள், சாலை பராமரிப்பு பணி, நெகிழி ஒழிப்பு, சுற்றுபுறத்தை தூய்மை செய்தல். போன்ற பணிகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக மாணவ, மாணவிகள் அகற்றி அவற்றை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்டதை அரசு அதிகாரிகளும், பொது மக்களும் வெகுவாக பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P.கணேஷ், ப...

வீரபாண்டி கெளமாரியம்மன் கோவிலில் தேரோட்டம்: கலெக்டர் ஷஜீவனா வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவில் 12.5.2023 அன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் கலந்து கொண்டு திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு திருக்கோயில்களை பாதுகாத்திடும் பொருட்டும், அதில் பணிபுரியக்கூடிய அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், இசைக்கலைஞர்கள் போன்ற பல்வேறு நிலைகளில் பணிபுரிகின்ற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துக்கின்ற வகையிலும், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுககு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருகின்ற வகையிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறது. தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா 9.5.2023 முதல் தொடங்கப்பட்டு 16.5.2023 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 12.5.2023 அன்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்களால் வடம் பிடித்...

தேனி மாவட்டம் பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

தேனி மாவட்டம், பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் கட்டுமானப்பணி ஆகிய பணிகளை 11.5.2023 மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆதிப்பட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.0.62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பாலாஜி நகரில் ரூ.0.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் கட்டுமானப்பணி என மொத்தம் ரூ.3.02 கோடி மதிப்பீட்...

தேனியில் விவசாயத்தை ஊக்கப்படுத்த அரிசி இலவசமாக தரும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்

தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சார்பில் விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாய காப்போம் என்ற தலைப்பில் விவசாயம் குறித்த புகைப்படங்கள் கொண்ட பேனர் போட்டாவை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ் வைக்க வேண்டும். அந்த ஸ்டேட்ஸ்சை 100 பேர்கள் பார்த்தால் 1 கிலோ அன்னை ராஜபோகம் அரிசி இலவசமாக பெற்று கொள்ளலாம் என தேனி கிருஷ்ணா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு சில நிபந்தனைகளை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 1. ஸ்டேட்டஸ் வைத்த போனை நேரில் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் (screen shot) அனுமதி இல்லை. 2. ஒரு நம்பருக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி. 3. இந்த சலுகை மே 10-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரை 4. நிபந்தனைகளுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. K.சரவணன், சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ் 

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் செயலாளர் A.ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் A.S.R.மகேஸ்வரன், கல்லூரி இணைச்செயலாளர் S.நவீன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயந்திரவியல் துறையின் தலைவர் டாக்டர் B.ராதாகிருஷ்ணன்  வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வா டாக்டர்.C.மதளைசுந்தரம் கருத்தரங்கின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த கருத்தரங்கத்தில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கள ஒருங்கிணைப்பாளர் R.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கான திட்டங்கள் குறித்தும், மாணவர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பொருட்களாக மாற்றுவதற்கு அரசு மானியத்துடன் வழங்கும் திட்டங்கள், வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் அவர்களுடைய தனித்திறனை மேம்படுத்தி வேலை வாய்ப்பினை உருவாக்கும் பயிற்சிகள், செயல்படுத்தும் முறைகள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு தேவையான உரிமங்கள். சான்றிதழ்கள், தொழில்ம...

தேனி மாவட்டத்தில் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டங்கள்: கலெக்டர் ஷஜீவனா தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) - Special Scholarship for Elite Sportspersons Scheme - ELITE. 2. பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் - Mission International Medals Scheme - MIMS 3. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் - Champions Development Scheme - CDs ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள்: தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 1. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும் - அதிகபட்சம் 25 நபர்கள் வரை / அதிகபட்சம் உதவித் தொகை ஒர் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை) (i) கடந்த 2-ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிச...

தேனி மாவட்டத்தில் நடந்த தமிழ்நாடு அரசின் ஈராண்டு நிறைவு விழாவில் 784 பயனாளிகளுக்கு ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துதேவன்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் 8.5.2023 அன்று ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு ஈராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அரசின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசுகையில், இந்திய திருநாட்டில் தலைசிறந்த முதல்வராக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஈராண்டு ஆட்சியின் சாதனையை விளக்கும் வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து வளர்ச்சி அடைந்து வருவதை இங்கு நடைபெறும் நிகழ்வின் மூலம் காணமுடிகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேனி மாவட்டத்தில், இன்...

தேனியில் இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு நிகழ்ச்சி

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி காரியாலயத்தில் 7.5.2023 அன்று வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.  நி கழ்ச்சிக்கு பெரியகுளம் நகர தலைவர் கோகுல கண்ணன் பட்டர் தலைமை தாங்கினார்.  தேனி நகர செயலாளர் தினேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் இராமராஜ் வழிகாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம்:1.  தேனி ரத்தினா நகரில் எட்டாவது தெருவில் அமைந்துள்ள வடிகால் பாலத்தை ஊராட்சி நிர்வாகம் இடித்துவிட்டு இதுவரை செப்பனிடாமல் தாமதம் செய்து வருவதால் அப்பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நோய் தொற்றுக்களும் கொசுக்களின் அதிகரிப்பும் மற்றும் விஷ பூச்சிகளின் தொந்தரவுகளும்  பெருகிவருவதால் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த வடிகால் பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் அப்பகுதி மக்களை திரட்டி இந்து எழுச்சி முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம்:2....

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் வாகனம்: கனிமொழி எம்.பி., வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், அலங்காரத்தட்டு கிராமத்தில் நடைபெற்ற JSW சமூக பொறுப்பு நிதியிலிருந்து மேம்படுத்தப்பட்ட 7 அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்தல், 67 மாணவ- மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய மோட்டார் வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜென்னிட்ட செல்வராஜ், JSW நிறுவனத்தின் பொறுப்பாளர் பி.தென்னவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்