Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் வாகனம்: கனிமொழி எம்.பி., வழங்கினார்


தூத்துக்குடி மாவட்டம், அலங்காரத்தட்டு கிராமத்தில் நடைபெற்ற JSW சமூக பொறுப்பு நிதியிலிருந்து மேம்படுத்தப்பட்ட 7 அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்தல், 67 மாணவ- மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய மோட்டார் வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜென்னிட்ட செல்வராஜ், JSW நிறுவனத்தின் பொறுப்பாளர் பி.தென்னவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்

Comments