தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, வேலைவாய்ப்பு அலுவலகம், ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட விளையாட்டு மைதானம், ஆயுதப்படை விளையாட்டு மைதானம் வரை பாதையில் இருபுறமும் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் C.மதளைசுந்தரம், துணை முதல்வர் N.மாதவன், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் R.பிரதீப்குமார், ஒருங்கிணைப்பாளர் B.நாகராஜன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆயுதப்படை விளையாட்டு மைதானம் வரை பொது மக்களுக்கு இடையூராக இருந்த கருவேல மரங்கள், சாலை பராமரிப்பு பணி, நெகிழி ஒழிப்பு, சுற்றுபுறத்தை தூய்மை செய்தல். போன்ற பணிகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக மாணவ, மாணவிகள் அகற்றி அவற்றை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்டதை அரசு அதிகாரிகளும், பொது மக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன். மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கல்லூரி செயலாளர்கள் A.ராஜ்குமார் A.S.R.மகேஸ்வரன், கல்லூரி இணைச்செயலாளர் S.நவீன்ராம் மற்றும் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரா.சிவபாலன், சிறப்பு நிருபர்
Comments