Skip to main content

தேனி மாவட்டத்தில் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டங்கள்: கலெக்டர் ஷஜீவனா தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) - Special Scholarship for Elite Sportspersons Scheme - ELITE.

2. பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் - Mission International Medals Scheme - MIMS

3. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் - Champions Development Scheme - CDs ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள்: தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

1. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும் - அதிகபட்சம் 25 நபர்கள் வரை / அதிகபட்சம் உதவித் தொகை ஒர் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை)

(i) கடந்த 2-ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் (நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுபவை) பங்கு பெற்றிருக்க வேண்டும். ஆசிய விளையாட்டு போட்டி / காமன்வெல்த் போட்டிகள் அல்லது ஆசிய சாம்பியன்ஷிப் / காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டு காலங்களில் முதல் 8 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒலிம்பிக்கில் தனிநபர் / இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

(ii) கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.

2. பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (அதிகபட்சம் 75 நபர்கள் / 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட / அதிகபட்சம் உதவித் தொகை ஒர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை)

(i) அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

(ii) ஒலிம்பிக் / ஆசிய விளையாட்டு போட்டி / காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 1.12.2022 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

3. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் (அதிகபட்சம் 100 நபர்கள் / 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட மற்றும் அதிகபட்சம் உதவித் தொகை ஓர் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை)

(i) அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் மட்டும்.

(ii) 1.12.2022 அன்று 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை

பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான வின்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு (High Level Selection Committee) மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் (Shortlisted Candidates) நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 5.5.2023 முதல் சமர்ப்பிக்கலாம். 20.5.2023 மாலை 5மணி வரை விளையாட்டு வீரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி மற்றும் நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. மேற்காணும் மூன்று திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே, விண்ணப்பங்களை விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கெனவே உள்ள தங்களுடைய Registration ID மூலம் புதுப்பித்து கொள்ளலாம்.

மேலும், புதிய விண்ணப்பதார்கள் தங்களது விண்ணப்பங்களை 5.5.2023 முதல் 20.5.2023 வரை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். மேற்காணும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையம் 95140 00777 மற்றும் 78258 83865 என்ற எண்களை, அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்

Comments