Skip to main content

தேனி மாவட்டம் பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

தேனி மாவட்டம், பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் கட்டுமானப்பணி ஆகிய பணிகளை 11.5.2023 மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆதிப்பட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.0.62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பாலாஜி நகரில் ரூ.0.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் கட்டுமானப்பணி என மொத்தம் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அதன்மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது. 

அதனடிப்படையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் படித்து பயன்பெறும் வகையில் அறிவுசார் மையங்கள் கட்டுதல், ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் நிகழ்ச்சிகள் நடத்திட சமுதாய கூடங்கள் கட்டுதல், சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையிலும், உள்ளுர் விவசாயிகள் வெளியூர் சென்று  சிரமப்படாத வகையில் உள்ளுரிலேயே வணிகம் செய்யும் பொருட்டு சந்தைகள் அமைத்தல், பொது மக்கள் எளிதில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்;கு செல்லும் வகையில் சாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடை கட்டுமானப்பணி, அடிப்படை வசதி திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க கட்டுமானப்பணி, ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க கட்டுமானப்பணி ஆகிய பணிகளை மாவட்ட கலெக்டர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொறுப்பு) செ.இராஜாராம், பேரூராட்சி மன்ற தலைவர்கள் பா.கவியரசு (பூதிப்புரம்), அ.மிதுன்சக்கரவர்த்தி (பழனிசெட்டிபட்டி), பூதிப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயலட்சுமி உள்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் 

Comments