தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் செயலாளர் A.ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் A.S.R.மகேஸ்வரன், கல்லூரி இணைச்செயலாளர் S.நவீன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயந்திரவியல் துறையின் தலைவர் டாக்டர் B.ராதாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வா டாக்டர்.C.மதளைசுந்தரம் கருத்தரங்கின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த கருத்தரங்கத்தில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கள ஒருங்கிணைப்பாளர் R.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கான திட்டங்கள் குறித்தும், மாணவர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பொருட்களாக மாற்றுவதற்கு அரசு மானியத்துடன் வழங்கும் திட்டங்கள், வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் அவர்களுடைய தனித்திறனை மேம்படுத்தி வேலை வாய்ப்பினை உருவாக்கும் பயிற்சிகள், செயல்படுத்தும் முறைகள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு தேவையான உரிமங்கள். சான்றிதழ்கள், தொழில்முனைவோர் சுயதொழில் தொடங்குவதற்கு எவ்வாறு முதலீடு செய்வது மற்றும் இன்குபேசன் சென்டர்கள் மூலம் நம் சுய தொழிலுக்கு தேவையான உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் இந்த கருத்தரங்கில் தொழில்முனைவோர்கள் தங்களுடைய உற்பத்தி பொருளை தொழில்நுட்பத்தோடு மேம்படுத்தும் முறைகள், தொழில்முனைவோர் தங்களுடைய தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்களை அணுகும் முறைகள், பொருள்களை வடிவமைத்தல், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை மாணவர்களிடையே விரிவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறையின் தலைவர் T.ராஜமோகன், உப தலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த கருத்தரங்கத்ததிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர் N.மாதவன் மற்றும் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு செல்லின் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தினர். முடிவில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறையின் 3-ம் ஆண்டு மாணவி அஜந்தமீனா நன்றியுரை கூறினார்.
S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்
Comments