தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி காரியாலயத்தில் 7.5.2023 அன்று வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரியகுளம் நகர தலைவர் கோகுல கண்ணன் பட்டர் தலைமை தாங்கினார். தேனி நகர செயலாளர் தினேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் இராமராஜ் வழிகாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம்:1.
தேனி ரத்தினா நகரில் எட்டாவது தெருவில் அமைந்துள்ள வடிகால் பாலத்தை ஊராட்சி நிர்வாகம் இடித்துவிட்டு இதுவரை செப்பனிடாமல் தாமதம் செய்து வருவதால் அப்பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நோய் தொற்றுக்களும் கொசுக்களின் அதிகரிப்பும் மற்றும் விஷ பூச்சிகளின் தொந்தரவுகளும் பெருகிவருவதால் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த வடிகால் பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் அப்பகுதி மக்களை திரட்டி இந்து எழுச்சி முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்:2.
தேனி-மதுரை சாலையில் உள்ள குன்னூர் டோல்கேட் பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாத காரணத்தினால் டோல்கேட் இருக்கும் பகுதியில் உள்ள சுவர்கள் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரியவில்லை அதனால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை டோல்கேட் பகுதியில் மின் விளக்கு அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 3.
தேனி வீரபாண்டி
ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் முன்பாக வழக்கமாக பக்தர்கள் பொங்கல் வைக்கும் இடத்தில் தற்பொழுது கடைகளை அமைத்து இருப்பது பக்தர்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.
எனவே வழக்கமாக பொங்கல் வைக்கும் இடத்தில் உள்ள கடைகளை அகற்றி தருமாறு இந்து அறநிலையத்துறையும், பேரூராட்சி நிர்வாகத்தையும் இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது என்பன உள்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
K.சரவணன், சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ்
.
Comments