தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள அரசு நகர் 4-வது தெருவில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு 1 மணிக்கு மேல் உலாவி வருகிறார். அந்த மர்ம நபர் தலையில் தொப்பி, முகத்திற்கு மாஸ்க் அணிந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை ஒவ்வொன்றாக நோட்டமிட்டு வருகிறார். அந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான அந்த மர்ம பைக்கில் சென்று கொண்டே வீடுகளை நோட்டமிடுவது, நடந்து சென்று நோட்டமிட்டு வீடுகளை எட்டி பார்ப்பது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் மத்தியில் தகவல் கசிய தொடங்கியது. அதனால் தங்கள் பகுதியை சுற்றி வலம் வரும் அந்த மர்ம நபரின் நோக்கம் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கக்கூடிய விலை உயர்ந்த தங்க நகை உள்ளிட்ட ஆபரணங்களா அல்லது வேறு ஏதும் சமூக விரோத செயலுக்காக அப்பகுதிகளை அந்த மர்ம நபர் நோட்டமிட்டு வருகிறாரா என்பது தெரியவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே போலீசார் அரசு நகர் பகுதி முழுவதும் இரவு நேர ரோந்து சோதனைகளை அதிகப்படுத்தி அப்பகுதியில் சுற்றி வரக்கூடிய மர்ம நபரை பிடித்து அந்த நபர் யார், எ...
Publisher of the Website : Nagaraj Kamudurai