Skip to main content

Posts

தேனி அருகே நள்ளிரவில் வீடுகளை நோட்டமிட்டு வரும் மர்ம நபர்: அச்சத்தில் பொதுமக்கள்

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள அரசு நகர் 4-வது தெருவில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு 1 மணிக்கு மேல் உலாவி வருகிறார். அந்த மர்ம நபர் தலையில் தொப்பி, முகத்திற்கு மாஸ்க் அணிந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை ஒவ்வொன்றாக நோட்டமிட்டு வருகிறார். அந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான அந்த மர்ம பைக்கில் சென்று கொண்டே வீடுகளை நோட்டமிடுவது, நடந்து சென்று நோட்டமிட்டு வீடுகளை எட்டி பார்ப்பது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் மத்தியில் தகவல் கசிய தொடங்கியது. அதனால் தங்கள் பகுதியை சுற்றி வலம் வரும் அந்த மர்ம நபரின் நோக்கம் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கக்கூடிய விலை உயர்ந்த தங்க நகை உள்ளிட்ட ஆபரணங்களா அல்லது வேறு ஏதும் சமூக விரோத செயலுக்காக அப்பகுதிகளை அந்த மர்ம நபர் நோட்டமிட்டு வருகிறாரா என்பது தெரியவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.  எனவே போலீசார் அரசு நகர் பகுதி முழுவதும் இரவு நேர ரோந்து சோதனைகளை அதிகப்படுத்தி அப்பகுதியில் சுற்றி வரக்கூடிய மர்ம நபரை பிடித்து அந்த நபர் யார், எ...

தேனி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்து அலுவலர்களுக்கான சிறப்பு பயிலரங்கம்: கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடந்தது

தேனி மாவட்டம், வைகை அணை பகுதியில் உள்ள வனவியல் பயிற்சி கல்லூரி கூட்டரங்கில், காலநிலை மாற்ற இயக்கம் மற்றும்,  வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றம் குறித்து அலுவலர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா            தலைமையில் 23.11.2023 அன்று நடைபெற்றது. காலநிலை நெருக்கடி  மிகவும் பரவலாகவும்,  கடுமையாகவும் மாறிவருவதால் காலநிலை கொள்கை மற்றும் திட்டமிடலின் முக்கியத்துவத்தினை உணர்த்தவும் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் ஆகிய சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களை உருவாக்கியுள்ளார். இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து அனைத்து துறை அலுவலருக்கான சிறப்பு பயிற்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பயிலரங்கில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், பூமி வெப்பமடைதல், வளி மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த 10 முதல் 15 ஆண்டு...

தேனியில் 100 மாணவர்களுக்கு ரூ.4.56 கோடி மதிப்பீட்டில் வங்கி கல்வி கடனுதவிகள்: கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக 22.11.2023 அன்று நடைபெற்ற மாபெரும் கல்வி கடனுதவி வழங்கும் முகாமில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 100 மாணவர்களுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடனுதவிகளை  வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காகவும், அனைவருக்கும் கல்விக்கடன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் மாபெரும் கல்வி கடன் முகாம்களை நடத்த வேண்டும் என்று ஆணையிட்டார். அதன்படி, இன்று தேனி மாவட்டத்தில் இரண்டாவது முறையாக கல்விக்கடன் முகாம் நடைபெற்றது.  இம்முகாமில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், வங்கிகளில் உள்ள கடன் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், கடன் வாங்குவதற்கான புரிதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காக...

தேனியில் கூட்டுறவு வார விழா: 2,215 பயனாளிகளுக்கு ரூ.20.05 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

தேனி மாவட்டம், தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில் 20.11.23 அன்று 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர்  முன்னிலை வகித்தனர். விழாவில் ஊரக வளர்ச்சித்துறை                      அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளையும் வழங்கினார். அப்போது அமைச்சர் பேசுகையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2022-2023 ஆம் ஆண்டிற்கு 17,454 விவசாயிகளுக்கு ரூ.187.68 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2023-24) இதுவரை 10,675 விவசாயிகளுக்கு ரூ.126.51 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்கள மூலம் பயிர்க்கடன், நகை ஈட்டின் பேரில் பயிர்க்கடன், உரம், விதை உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல், கிட்டங்கி வ...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்ட அரங்கு: காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கினை 20.11.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர்  முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார். இந்த கூட்டரங்கமானது 7790 சதுர அடி பரப்பளவில் முற்றிலும் குளிரூட்டப்பட்டுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கட்டிடத்தில் முக்கிய விருந்தினர்களுக்கென தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமையும் வகையிலும், ஒலி அமைப்பு மற்றும் காட்சி திரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு சிறப்பு சாய்தள வசதிகளும், முதியோர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் அணுகும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ...

தேனி மாவட்டத்தில் செய்தியாளர்கள் என்ற பெயரில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: போலி நிருபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.

தேனி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் (செய்தியாளர்கள்) என்ற பெயரில் போலி பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், ரேசன் கடை பணியாளர்கள் சங்கம் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆகியோர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக தொடர்ந்து புகார் மனுக்கள் வரப்பெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் மாவட்ட அளவில் மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் தவிர எங்கு பார்த்தாலும் பத்திரிக்கையாளர் என தங்களை தாங்களே அறிமுகப்படுத்தி கொண்டு, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் அலுவலர்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாகவும்,  பல்வேறு கசப்பான சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.  மேலும்,  தங்களுக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறி பொதுமக்களை  ஏமாற்றி பணம் பறிப்பதாக தெரிய வருகிறது. அங்கீகரிக்கப்படாத போலி நிருபர்கள் வாட்ஸ்அப் செயலி மற்றும் சமூக வலைதளங்களில்  செய்திகளை வெளியிடுவேன் என அரசு அலுவலர்களையும், தனியார் அமைப்பு பிரதிநிதிகளை மிரட்டி பணம் பறிப்பதாக தெரிய வருகிறது.  எ...

தேனி மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்றுவிக்க மாவட்ட விளையாட்டு மைதானத்தை உபயோகிக்க அனுமதி வழங்க கோரி கலெக்டரிடம் முன்னாள் ராணுவ வீரர் கோரிக்கை மனு

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்களிடம் முன்னாள் ராணுவ வீரர் ஜி.ஆர்.இராமச்சந்திரன் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில், நான் கடந்த 5 வருடங்களாக மதுரையில் ஐயர் பங்களா பகுதியில் ஏழை மற்றும் திறமை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க GMR PT Club மூலமாக பயிற்சி அளித்து வருகின்றேன். இந்த பயிற்சி சேவை நோக்கத்தோடு இலவசமாக வழங்கப்படுகின்றது. எனது ஓய்வூதியம் முழுவதையும் மற்றும் எனது நேரத்தையும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு போட்டிக்காக செலவிடுகிறேன். எனது பயிற்சி மூலம் இதுவரை 23 மாணவ, மாணவியர்கள் ராணுவம், தமிழக காவல்துறை மற்றும் மத்திய அரசு பல்வேறு சீருடை பணிகளில் பணியாற்றி வருகின்றனர். என்னுடைய மாணவ, மாணவியர்கள் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவிளான போட்டிக்கு (டில்லியில்) தேர்வாகி உள்ளனர். என்னுடைய இந்த பணியை எனது பூர்விக ஊர் பெரியகுளம் ஆகும்.  தேனி மாவட்டத்தில், ஜிம்னாஸ்டிக் (GYMNASTIC) மற்றும் டேக்வாண்டோ (TAEKWONDO) போட்டிகளுக்கு தேனி மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல மாணவ, மாணவியர்...

கனிமொழி கருணாநிதி எம்.பி., முன்னெடுப்பில் நடைபெறும் கலைஞர் 100 வினாடி-வினா போட்டியில் 1.75 லட்சம் குழுவினர் பதிவு: நவம்பர் 13-ந் தேதி நிறைவடைகிறது

தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட கலைஞர் 100 வினாடி-வினா போட்டியில் 1,75,000-க்கும் மேற்பட்ட குழுவினர் பதிவு செய்து ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.  கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில்‌ தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழியின் முயற்சியில் கலைஞர் 100 வினாடி-வினா போட்டிகள் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 தொடங்கப்பட்டன. போட்டிகள் இணைய வழியில் நடத்தப்பட்டு 7.11.2023 வரை 1,75,000-த்திற்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்துள்ளன. மேலும், 2,11,041 மேற்பட்ட முயற்சிகளில் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். 7,30,897 பேர் www.kalaignar100.co.in இணைய தளத்தை இதுவரை பார்வையிட்டுள்ளனர். தி.மு.க மகளிர் அணி சார்பில் தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கலைஞர் 100 வினாடி வினா' போட்டி, கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. ரூ.35 லட்சத்துக்கு மேல் ரொக்கத் தொகையை பரிசளித்து ''கலைஞர் 100 வினாடி வினா'' எனும் அறிவுத் திருவிழாவை நடத்துகிறார் கனிமொழி கருணாநிதி எம்.பி., த...

தேனியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6.11.2023 அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 221 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். கூட்டத்தின் போது பெரியகுளம் வட்டம், தென்கரையை சேர்ந்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக நிவாரண உதவியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, மாணவன் குடும்பத்தார்க்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,900/- மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.1.79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார். மேலும், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு ஆவின் பொருட்கள் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டர் அலுவல...

'மக்கள் களம்' நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி.,

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள வல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி  27.10.2023  அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதனைத்தொடர்ந்து ஒரு பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா, ஒரு பயனாளிக்கு ரூ.10,000 திருமண உதவித் தொகை, ஒரு பயனாளிக்கு ரூ.2,759 கல்வி உதவித்தொகைக்கான காசோலை, 2 பயனாளிகளுக்கு ரூ.2,243 நிதி உதவி என மொத்தம் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்வின் போது வல்லநாடு ஊராட்சியை சார்ந்த முத்து கணபதி என்பவர் வாகைக்குளம் - வல்லநாடு மின்பாதையில் மின்வயர் மாற்றி தரும்படி கோரிக்கை வைத்தார். அதனைத்தொடர்ந்து 6.11.2023 அன்று வகைக்குளம் - வல்லநாடு பகுதியில் மின்வாரிய ஊழியர்கள், சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் மற்றும் மின்வயர்கள் பொருத்தப்பட்டது. இந்த மக்கள் களம் நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்...