Skip to main content

தேனி மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்றுவிக்க மாவட்ட விளையாட்டு மைதானத்தை உபயோகிக்க அனுமதி வழங்க கோரி கலெக்டரிடம் முன்னாள் ராணுவ வீரர் கோரிக்கை மனு

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்களிடம் முன்னாள் ராணுவ வீரர் ஜி.ஆர்.இராமச்சந்திரன் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில், நான் கடந்த 5 வருடங்களாக மதுரையில் ஐயர் பங்களா பகுதியில் ஏழை மற்றும் திறமை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க GMR PT Club மூலமாக பயிற்சி அளித்து வருகின்றேன். இந்த பயிற்சி சேவை நோக்கத்தோடு இலவசமாக வழங்கப்படுகின்றது. எனது ஓய்வூதியம் முழுவதையும் மற்றும் எனது நேரத்தையும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு போட்டிக்காக செலவிடுகிறேன். எனது பயிற்சி மூலம் இதுவரை 23 மாணவ, மாணவியர்கள் ராணுவம், தமிழக காவல்துறை மற்றும் மத்திய அரசு பல்வேறு சீருடை பணிகளில் பணியாற்றி வருகின்றனர். என்னுடைய மாணவ, மாணவியர்கள் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவிளான போட்டிக்கு (டில்லியில்) தேர்வாகி உள்ளனர். என்னுடைய இந்த பணியை எனது பூர்விக ஊர் பெரியகுளம் ஆகும். 

தேனி மாவட்டத்தில், ஜிம்னாஸ்டிக் (GYMNASTIC) மற்றும் டேக்வாண்டோ (TAEKWONDO) போட்டிகளுக்கு தேனி மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல மாணவ, மாணவியர்கள் திறமை இருந்தும், அவர்கள் விளையாட்டு துறையில் முன்னேற்றம் அடைய முடியவில்லை. இது போன்ற மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கமளித்து தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்த கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன். எனது முயற்சிக்கு உறுதுணையாக நான் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு சொந்தமான பயிற்சி வளாகத்தில் உள்ள ஜிம்னாஸ்டிக் உள்ளரங்கில் விளையாட்டு திடல்களை உபயோகப்படுத்தி கொள்ள அனுமதி வழங்கிட வேண்டும். மேலும் அதற்கான உபயோக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியிருப்பின் அதை செலுத்துவதற்கு தயாராக உள்ளேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சதிஷ், இணை ஆசிரியர் 

Comments