Skip to main content

'மக்கள் களம்' நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி.,

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள வல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி  27.10.2023  அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதனைத்தொடர்ந்து ஒரு பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா, ஒரு பயனாளிக்கு ரூ.10,000 திருமண உதவித் தொகை, ஒரு பயனாளிக்கு ரூ.2,759 கல்வி உதவித்தொகைக்கான காசோலை, 2 பயனாளிகளுக்கு ரூ.2,243 நிதி உதவி என மொத்தம் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.


இந்நிகழ்வின் போது வல்லநாடு ஊராட்சியை சார்ந்த முத்து கணபதி என்பவர் வாகைக்குளம் - வல்லநாடு மின்பாதையில் மின்வயர் மாற்றி தரும்படி கோரிக்கை வைத்தார். அதனைத்தொடர்ந்து 6.11.2023 அன்று வகைக்குளம் - வல்லநாடு பகுதியில் மின்வாரிய ஊழியர்கள், சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் மற்றும் மின்வயர்கள் பொருத்தப்பட்டது.

இந்த மக்கள் களம் நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருங்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜி.ராமசுவாமி, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் முருகன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சதிஷ், இணை ஆசிரியர் 

Comments