Skip to main content

Posts

Showing posts from January, 2025

பெரியகுளத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் : பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

தேனி, பிப்.1- தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 30 வார்டுகளை கொண்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த நகராட்சியாகும். இங்கு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பொதுப்பணித்துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், சார் பதிவாளர் அலுவலகம், கிளை சிறைச்சாலை, கால்நடை மருத்துவமனை என அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் அனைத்தும் ஒரே பகுதியில் அமைந்துள்ளதால் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பல்வேறு  தேவைகள் வேண்டி மேற்படி அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர்.  இந்த அலுவலகங்களுக்கு பெரியகுளத்தில் அனைத்து பகுதிகளிலும் சிறு சிறு சாலைகள் இருப்பினும் மிக முக்கிய சாலையாக கருதப்படுவது தண்டுபாளையம் ரோடு பிரதான சாலையாகும். இந்த சாலையில் இறைச்சி கூடங்கள், காய்கறி மார்க்கெட் வழியாக  மேற்படி அரசு துறை சார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள்  சென்று வருகின்றனர்.  ஆம்புலன்ஸ், தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ,ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் என தினசரி  நூற்றுக்கணக்கான வாகனங்கள் காலை முதல் இரவு வரை இந்த சாலை வழியாக சென்று வருவதால் அதிக போக்குவரத்...

தேனியில் பிப் 2-ந் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த ஐகோர்ட்டு அனுமதி: நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மாற்றி அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு

தேனி, ஜன.31- தேனியில் 7 ஒன்டர்ஸ் அமைப்பின் சார்பில் பிப்ரவரி 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தேனி நகர்  பகுதியில் மதுரை சாலையில் தேனி பழைய பஸ் நிலையம் முதல் பங்களா மேடு வரை ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சி தேனி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடும். எனவே இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று பாஜக, இந்து முன்னணி உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து வந்தனர்.  இந்த நிலையில் தேனி நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுக்கப்படவில்லை என போலீஸ் தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து 7 ஒன்டர்ஸ் அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி W.P 2921/2025 என்ற எண்ணில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட்டு தேனி நகரில் பிப்ரவரி 2-ந் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்த அனுமதி அளித்தது.  அதில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஏற்கெனவே திட்டமிட்டபடி நகர் பகுதியில் நடத்தாமல் நகர...

தேனியில் ரெட்டி நல சங்கத்தினர் ஆலோசனை

தேனி, ஜன.30- தேனி மாவட்ட ரெட்டி நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ஆர். ராஜன் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் சங்க செயலாளர் அருண் பாஸ்கர் தெரிவிக்கையில், தேனி  மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ரெட்டி சமுதாய மக்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு மாவட்ட சங்கம் உதவி செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். அதுபோல மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மணிகண்டன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு அழைப்பிதழை வழங்கி சிறப்புரையாற்றினார்  இதனைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் உத்தமர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு ரெட்டி நல சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு உத்தமர் ஓ.பி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது  மேலும் உத்தமர் ஓ.பி.ஆர் அவர்களை பற்றிய ஆவணப்படமும், குறும்படமும் எடுத்து மக்கள் அனைவரும் அவரின் வாழ்க்கை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும் என்று முடிவு செய்யப்...

தேனி அருகே கோடாங்கிபட்டியில் ரூ.30.91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

தேனி, ஜன.29- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், கோடாங்கிபட்டியில் ரூ.30.91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்தினை 29.1.2025 அன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா புதிய அலுவலக கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி வைத்து அலுவலக பகுதியை பார்வையிட்டார். தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் வருவாய்த்துறையின் மூலமே செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் என 2 வருவாய் கோட்டங்களில், 5 வட்டாட்சியர் அலுவலகம், 17 வருவாய் ஆய்வாளர் அலுவலகம், 114 கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலரால் வருவாய் ஆய்வாளர் மூலம் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சொத்து மதிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்களுக்கான உண்மை தன்மை குறித்து...

தேனியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி பா.ஜ.க-வினர் கலெக்டர், எஸ்,பி-யிடம் கோரிக்கை மனு

தேனி, ஜன.29 - தேனி நகர பா.ஜ.க தலைவர் ரவிக்குமார் தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் செல்வேந்திரன், விஜயகுமார், மணிகண்டன், முத்துராஜா, பெரியசாமி, சரவணன், முத்துச்செல்வன், குமரேசன் தமிழரசன் ஆகியோர் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, வருகின்ற பிப்ரவரி 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேனி நகர்  பகுதியில் மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது . தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சார சீரழிவுக்கும், மேலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருக்கக்கூடும் இந்த நிகழ்ச்சி தேனி மாவட்டம் முழுவதும் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டது கிராமங்களை அதிகமாக கொண்ட தேனி மாவட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை தடம் மாறி செல்வதற்கு வாய்ப்பாக அமைகிறது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பலர் தன்னிலை மறந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது...

போடி அருகே நல்லோர் வட்டம் சார்பில் மலைகிராம மக்களுக்கு குளிர்கால ஆடைகள் வழங்கும் விழா

தேனி, ஜன.27 - தேனி மாவட்டம் கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முதுவாக்குடி மலைவாழ் மக்கள்  வசிக்கும் கிராமம். இப்பகுதியில் பழங்குடியின மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். போடியில் இருந்து குரங்கணி சென்று அங்கிருந்து ஜீப் மூலம்  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கரடுமுரடான மலை பகுதியை கடந்து சென்றால் தான் இக்கிராமத்தை  அடைய முடியும்.. தேனி மாவட்ட நல்லோர் வட்டம் மாவட்ட பொறுப்பாளர்களின் சார்பாக கடும்பனி மற்றும் குளிரில் வாழ்ந்து வரும் இப்பகுதி பழங்குடியின மக்களுக்கு  குளிர்கால ஆடைகள் வழங்கும் விழா மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்வாதார நீண்டநாள் பிரச்சனைகளை  ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்பிக்கும் களப்பணி செய்யும்  நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு நல்லோர் வட்டம்  தேனி  மாவட்ட பொறுப்பாளர் குறிஞ்சிமணி தலைமை தாங்கினார். பாரம்பரிய இயற்கை விவசாய மாநில பொறுப்பாளர் நாட்ராயன் குரங்கணி கிராம முன்னாள் 4-வது வார்டு உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுவாக்குடி கிராம  தலைவர் வேலப்பன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 60-க்கும் மே...

தேனி மாவட்டத்தில், ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கலெக்டர் ஷஜீவனா பங்கேற்பு

தேனி, ஜன.26 - தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம் கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்கள் கலந்து கொண்டார். குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் 26.12025 அன்று நடைபெற்றது. இதில் தேனி ஊராட்சி ஒன்றியம், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்.விஷஜீவனா. கலந்து கொண்டார். கிராம சபை கூட்டத்தின் நோக்கம் மக்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பூர்த்தி செய்வதற்கும் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து மக்களின் முழு ஆதரவோடு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி அதனை செயல்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளில் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம். தணிக்கை அறிக்கை கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு ...

தேனி மாவட்ட கோர்ட்டில் குடியரசு தின விழா: மாவட்ட முதன்மை நீதிபதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

தேனி, ஜன.26- தேனி  ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் எம்.கே.எம் முத்துராமலிங்கம், சந்தானகிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தேனி அமர்வு நீதிபதி அனுராதா, கூடுதல் அமர்வு நீதிபதி கோபிநாதன், போக்சோ அமர்வு நீதிபதி கணேசன், சார்பு நீதிபதி கீதா. இலவச சட்டப்பணிகள் உதவி மைய செயலாளர் பரமேஸ்வரி. நீதித்துறை நடுவர் ஜெயமணி மற்றும் பயிற்சி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். குடியரசு தினவிழாவை சிறப்பிக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களின் தனித்திறமைகளை பாராட்டும் விதமாக பரிசுகளையும் மற்றும் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தேனி மாவட்ட நீதித்துறை விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன்...

போடி சட்டமன்ற காங்கிரஸ் அமைப்பாளராக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி நியமனம்: போடி வட்டார தலைவர் ஜம்பு சுதாகர் வாழ்த்துக்களை தெரிவித்தார்

தேனி, ஜன.23 - தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராமம், வட்டாரம், நகரம், மாநகரம் பகுதியில்  மறுசீரமைப்பினை தமிழக காங்கிரஸ் கமிட்டி மேற்கொண்டு வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் அமைப்பாளராக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன்  வி.பி.ஏ.மிதுன்சக்கரவர்த்தி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்கள் நியமித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் அமைப்பாளரின் கட்சி பணி சிறக்க போடி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாக போடி வட்டார தலைவர் ஜம்பு சுதாகர், போடி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் அமைப்பாளர் மிதுன் சக்கரவர்த்தி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது போடி வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். நாகராஜ், முதன்மை நிருபர்   ...................

மதுரை, தேனூரில் இஸ்லாமியர் நிலத்தில் விளைந்த நெல் பாரம்பரிய முறையில் அழகர் கோவிலுக்கு அனுப்பிய கிராம மக்கள்

மதுரை, ஜன.21- மதுரை மாவட்டம், சமயநல்லூர்  அருகே தேனூர் ஊராட்சி கிராமத்தில் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற சுந்தரவள்ளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி உள்ள சுமார் ஏழுநூறு ஏக்கருக்கு மேல் ஆற்று, கண்மாய் பாசனம் மூலம் நெல், வாழை போன்ற விவசாயம் அப்பகுதி விவசாயிகள்,செய்து வருகின்றனர்.  இதில் அப்பகுதியில் விளையும் முதல் நெல்லை அறுவடை செய்து கோவிலில் வைத்து அழகர்கோவில் அழகு மலையானுக்கு வைக்கோல் திரித்து, நெல்லில் கோட்டை கட்டி பூஜைகள் செய்து வணங்கி தலைசுமையாக சுமந்து கிராம மக்கள் கொண்டு  சென்று அழகர்கோவில் பூசாரியிடம்  ஒப்படைத்து வருட நெல் அறுவடை கணக்கு வாசிப்பது பாரம்பரிய வழக்கம், அந்த வகையில் இந்த வருடம் தை மாத முதல் அறுவடைக்குரிய நெல் இஸ்லாமியர் நிலத்தில் விளைந்தது.  இதனை வயலில் பூஜைகள் வழிபாடு நடததினர். இதன்பின்னர் நெல்லை அறுவடை செய்து கிராமத்தில் உள்ள சுந்தரவள்ளியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து முதிர்ந்த நெல்லில் கோட்டை கட்டி அழகர்கோவிலுக்கு  அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி மதநல்லிணக்கமாக நடப்பதாக விவசாயிகள் தெரிவித்தார்கள். இந்தாண்டு தை ...

மதுரை, விக்கிரமங்கலத்தில் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கோவில் மஹா கும்பாபிஷேகம்

மதுரை, ஜன.20 - மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் கிராமத்தில் 400 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற, ஐந்து பேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா, நல்லபிள்ளைத்தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலயத்தை புதுப்பித்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நடத்த  பெரியோர்கள் முன்னிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது,  இந்த நிலையில் எட்டூர் கிராமத்திலேயே சிற்ப சாஸ்த்திரம் ஆகம சாஸ்திர முறைப்படி அமைந்துள்ள ஆலயத்திற்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் தீர்மானித்து குலம் செழிக்க, குலம் காக்க, மண் வளம் பெருக வேண்டி பங்காளிகள் முன்னிலையில் சிவாச்சாரியார் கணேச சாஸ்திரிகள், முரளி கிருஷ்ணாசர்மா தலைமையான குழுவினர் யாக சாலைகள் அமைத்து முதற்கட்டமாக ஜன 18-ம் தேதி பூஜையாக மங்கள இசை, கணபதி பூஜை,நவகிரக வழிபாடு,கோ பூஜை ஹோமம் சங்கல்பம் செய்து மண் எடுத்தல், காப்பு கட்டுதலுடன், தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர், இதனைத்தொடர்ந்து ஜன 19-ம் தேதி இரண்டாம் கட்டமாக கும்ப அலங...

கண்ணகி கோவிலுக்கு செல்லும் தெல்லுக்குடி பாதையை பார்வையிட சென்றவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்

தேனி, ஜன.17- தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக செல்லும் தெல்லுக்குடி பாதையை பார்வையிட சென்ற விவசாயிகளையும், கண்ணகி கோயில் பாதை மீட்பு குழுவினரையும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். தேனி மாவட்டம், கூடலுார் பளியன்குடி அருகே விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோவில். இக்கோவிலுக்கு செல்ல லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ.,துாரம் தமிழக வனப்பாதை உள்ளது. அதுபோல கேரளா குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கி. மீ., துாரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதையும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று இங்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு செல்ல ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் கேரளா அனுமதியுடன் பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தமிழக வனப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்கள் அதிகமானோர் நடந்து செல்ல முடியாமல் கேரள வனப்பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கேரள வனத் துறை பல்வேறு கெடுபிடிகளுடன் தமிழக பக்தர்கள் கோவிலுக்...

தேனி கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் பள்ளிக்கு கல்விக் கொடை கொடுத்தோருக்கு விருது வழங்கும் விழா : நடிகர் சசிக்குமார் வழங்கினார்

தேனி, ஜன.17- தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலை பள்ளிக்கு கல்விக் கொடை கொடுத்தோருக்கு விருது வழங்கும் விழா பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர், பள்ளி கல்வி மேலாண்மை குழு தலைவர் கடவுள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டிலட்சுமி வரவேற்றார். விழாவில் திரைப்பட இயக்குனர், நடிகர் சசிக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளிக்கு கல்விக் கொடை கொடுத்தோருக்கு விருதுகளை வழங்கி பேசினார். விழாவின் போது பள்ளி மாணவ, மாணவிகளின் மாறுவேட போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த போட்டி மற்றும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ,  மாணவிகளுக்கு பரிசுகளை நடிகர் சசிகுமார் வழங்கினார்.  விழாவில் பள்ளி ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, சரண்யா, அஜீத்தா, பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கம் உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் நடிகர் சசிக்குமார் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நாகராஜ், முதன்மை நிருபர் . ...........

தேனி மாவட்டத்தில், கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் ஐ. பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தேனி, ஜன.16- தேனி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கூடலூர் நகராட்சி, லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில், 15.1.2025அன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 184-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்),  ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு விவசாயத்திற்கும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்து, விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கேற்றவாறு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...

தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து முனையம் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை வளைவு திறப்பு விழா

தேனி, ஜன.14- தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து முனையம் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை வளைவு திறப்பு விழா 14.1.2025 அன்று நடைபெற்றது. விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு காமராஜர் பேருந்து முனையம் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை மற்றும் கல்வெட்டினை திறந்து வைத்தார். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் முன்னிலை வகித்தார்.  விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம், தேனி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர். நகர் மன்ற உறுப்பினர் என்.சி.நாராயணபாண்டியன் மற்றும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் MKM.முத்துராமலிங்கம்,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், வணிகர் சங்க தேனி மாவட்ட ...