தேனி கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் பள்ளிக்கு கல்விக் கொடை கொடுத்தோருக்கு விருது வழங்கும் விழா : நடிகர் சசிக்குமார் வழங்கினார்
தேனி, ஜன.17-
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலை பள்ளிக்கு கல்விக் கொடை கொடுத்தோருக்கு விருது வழங்கும் விழா பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர், பள்ளி கல்வி மேலாண்மை குழு தலைவர் கடவுள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டிலட்சுமி வரவேற்றார்.
விழாவில் திரைப்பட இயக்குனர், நடிகர் சசிக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளிக்கு கல்விக் கொடை கொடுத்தோருக்கு விருதுகளை வழங்கி பேசினார். விழாவின் போது பள்ளி மாணவ, மாணவிகளின் மாறுவேட போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த போட்டி மற்றும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை நடிகர் சசிகுமார் வழங்கினார்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, சரண்யா, அஜீத்தா, பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கம் உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் நடிகர் சசிக்குமார் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நாகராஜ், முதன்மை நிருபர் .
...................
Comments