Skip to main content

தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து முனையம் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை வளைவு திறப்பு விழா

தேனி, ஜன.14-

தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து முனையம் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை வளைவு திறப்பு விழா 14.1.2025 அன்று நடைபெற்றது. விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு காமராஜர் பேருந்து முனையம் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை மற்றும் கல்வெட்டினை திறந்து வைத்தார். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் முன்னிலை வகித்தார். 
விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம், தேனி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர். நகர் மன்ற உறுப்பினர் என்.சி.நாராயணபாண்டியன் மற்றும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் MKM.முத்துராமலிங்கம்,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், வணிகர் சங்க தேனி மாவட்ட கௌரவ தலைவர் AMRR.சந்திரகுமார், தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை செயலாளர் கமலக்கண்ணன், தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி செயலாளர் ராஜ்குமார், முதல்வர் மதளைசுந்தரம் உள்பட தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள், தேனி மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், அனைத்து கல்வி  நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து முனையம் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை வளைவு திறப்பு விழாவை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் சார்பாக 1000 பேர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

நாகராஜ், முதன்மை நிருபர் 
......................

Comments