Skip to main content

தேனியில் ரெட்டி நல சங்கத்தினர் ஆலோசனை

தேனி, ஜன.30-

தேனி மாவட்ட ரெட்டி நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ஆர். ராஜன் தலைமை தாங்கினார். 
கூட்டத்தில் சங்க செயலாளர் அருண் பாஸ்கர் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ரெட்டி சமுதாய மக்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு மாவட்ட சங்கம் உதவி செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

அதுபோல மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மணிகண்டன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு அழைப்பிதழை வழங்கி சிறப்புரையாற்றினார் 
இதனைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் உத்தமர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு ரெட்டி நல சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு உத்தமர் ஓ.பி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது 

மேலும் உத்தமர் ஓ.பி.ஆர் அவர்களை பற்றிய ஆவணப்படமும், குறும்படமும் எடுத்து மக்கள் அனைவரும் அவரின் வாழ்க்கை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பொருளாளர் செண்பகராமன், உப தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார், காமுத்துரை, வீரமணி, மனோகரன், பாலகிருஷ்ணன், கோகுல் உள்பட கலந்து கொண்டனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 
....................

Comments