தேனி, ஜன.26-
தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் எம்.கே.எம் முத்துராமலிங்கம், சந்தானகிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தேனி அமர்வு நீதிபதி அனுராதா, கூடுதல் அமர்வு நீதிபதி கோபிநாதன், போக்சோ அமர்வு நீதிபதி கணேசன், சார்பு நீதிபதி கீதா. இலவச சட்டப்பணிகள் உதவி மைய செயலாளர் பரமேஸ்வரி. நீதித்துறை நடுவர் ஜெயமணி மற்றும் பயிற்சி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியரசு தினவிழாவை சிறப்பிக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களின் தனித்திறமைகளை பாராட்டும் விதமாக பரிசுகளையும் மற்றும் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தேனி மாவட்ட நீதித்துறை விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் வழங்கினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
......................
Comments