மதுரை, தேனூரில் இஸ்லாமியர் நிலத்தில் விளைந்த நெல் பாரம்பரிய முறையில் அழகர் கோவிலுக்கு அனுப்பிய கிராம மக்கள்
மதுரை, ஜன.21-
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சி கிராமத்தில் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற சுந்தரவள்ளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி உள்ள சுமார் ஏழுநூறு ஏக்கருக்கு மேல் ஆற்று, கண்மாய் பாசனம் மூலம் நெல், வாழை போன்ற விவசாயம் அப்பகுதி விவசாயிகள்,செய்து வருகின்றனர்.
இதில் அப்பகுதியில் விளையும் முதல் நெல்லை அறுவடை செய்து கோவிலில் வைத்து அழகர்கோவில் அழகு மலையானுக்கு வைக்கோல் திரித்து, நெல்லில் கோட்டை கட்டி பூஜைகள் செய்து வணங்கி தலைசுமையாக சுமந்து கிராம மக்கள் கொண்டு சென்று அழகர்கோவில் பூசாரியிடம் ஒப்படைத்து வருட நெல் அறுவடை கணக்கு வாசிப்பது பாரம்பரிய வழக்கம், அந்த வகையில் இந்த வருடம் தை மாத முதல் அறுவடைக்குரிய நெல் இஸ்லாமியர் நிலத்தில் விளைந்தது. இதனை வயலில் பூஜைகள் வழிபாடு நடததினர். இதன்பின்னர் நெல்லை அறுவடை செய்து கிராமத்தில் உள்ள சுந்தரவள்ளியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து முதிர்ந்த நெல்லில் கோட்டை கட்டி அழகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி மதநல்லிணக்கமாக நடப்பதாக விவசாயிகள் தெரிவித்தார்கள்.
இந்தாண்டு தை மாத முதலில் விளைந்த நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. கிராமத்தில் பல தலைமுறைகளாக வாழும் விவசாயி பாரூக்.(எ).பீர் முகமது (வயது 56). என்ற இஸ்லாமியருக்கு சொந்தமானது, இதனை கண்ட முஸ்லிம் விவசாயி நிலத்தில் விளைந்த நெல்லை முறைப்படி பூஜைகள் செய்து அறுவடை செய்யப்பட்டது அறுவடையான முதல் நெல்லை வாகனத்தில் ஏற்றி வந்து, அம்மன்கோவில் வளாகத்தில் நெல் குவியலாக கொட்டி வைத்து, நெல்லை படியில் அளந்து வைக்கோலில் திரித்து கட்டி கோட்டையாக கட்டினர், இந்நெல்லுக்கு கோவில் பூஜாரி பாண்டி சந்தனம் தெளித்து, மலர் தூவி மரியாதை செய்து தீபாரதனை காட்டி பூஜை வழிபாடு செய்யபட்டது.
இதனைத்தொடர்ந்து கோட்டை கட்டிய நெல் கட்டை தலையில் சுமந்து சென்று சுந்தராஜபெருமாள் கோவில் முன்பு உள்ள கொட்டாரத்தில் இறக்கி வைக்கப்பட்டு,கோவில் கணக்கர் வசம் ஒப்படைக்கும் வைபவம் போது பூஜையுடன் சாமி முன் தேனூர் கிராம கோட்டை நெல் வந்தது என வாசிப்பது எங்கள் கிராமத்திற்கு கிடைத்த பெருமை என கிராமத்தினர் தெரிவித்தனர்.
ஆண்டாண்டு காலமாக தாங்கள் பழமை மாறாமல் மதநல்லிணக்கமாக நடத்தும் இந்த நெல் கோட்டை கட்டும் விழா, கிராம பொதுமக்கள்,சாதி மதம் பேதமில்லாமல் ஒன்றாக கூடி வாழ்வதை காட்டுகிறது என்றார்கள்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
.........................
Comments