தேனி மாவட்டத்தில், ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கலெக்டர் ஷஜீவனா பங்கேற்பு
தேனி, ஜன.26-
தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம் கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்கள் கலந்து கொண்டார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் 26.12025 அன்று நடைபெற்றது. இதில் தேனி ஊராட்சி ஒன்றியம், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்.விஷஜீவனா. கலந்து கொண்டார்.
கிராம சபை கூட்டத்தின் நோக்கம் மக்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பூர்த்தி செய்வதற்கும் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து மக்களின் முழு ஆதரவோடு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி அதனை செயல்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளில் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம். தணிக்கை அறிக்கை கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும். தேசிய வாக்காளர் இயக்கம் ஜூல் ஜீவன் திட்டம் தூய்மை பாரத இயக்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக நெகிழி சேகரிப்பு இயக்கம் சார்பில் நெகிழிப் பொருட்களை ஒழிப்பதிலும் அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும். கழிவுநீர் நீர்நிலைகளில் கலக்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கொடுவிலார்பட்டி ஊராட்சியில் அதிக அளவு நெகிழி பொருட்கள் சேகரித்த தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நிளைவு தினமான ஜனவரி 30-ம் நாள் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் 31.1.2025 முதல் 15.2.2025 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு தொழுநோய் இல்லாத இந்தியா என்ற தலைப்பிலான உறுதிமொழி மற்றும் காசநோய் ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதன் பின்னர் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், ஊராட்சிகளில் உதவி இயக்குநர் பழனிவேல், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சாந்தாமணி மாவட்ட சுகாதார அலுவலர் மருஜவஹர்லால் துணை ஆட்சியர் (பயிற்சி) டினு அரவிந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) சரளா, உதவி இயக்குநர் (தோட்டக்கலை) மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி வட்டாட்சியர் சதீஸ்குமார், கொடுவிலார்பட்டி ஊராட்சி செயலாளர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள், விடுதி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தேனி அரண்மனைபுதூர் முல்லை நகர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ விருத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இதேபோன்று தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பேபி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார்.
தேனி ஊராட்சி ஒன்றியம், அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாண்டி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய பொறியாளர் பிரகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் சுருளி தலைமையில் நடைபெற்றது.
இதேபோன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுபட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் பெரியகுளம் சப்- கலெக்டர் ரஜத் பீடன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராம பொதுமக்கள், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
....................
Comments