Skip to main content

Posts

Showing posts from November, 2024

தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

தேனி, நவ.23- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 23.11.2024 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தேனி ஊராட்சி ஒன்றியம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அதுபோல கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி மாரிமுத்து தலைமையில், ஊராட்சி செயலாளர் வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்றது. நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானமணி பரமசிவம் தலைமையில், ஊராட்சி செயலாளர் சுருளி முன்னிலையில் நடைபெற்றது. ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில், ஊராட்சி செயலாளர் ரகுநாத் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  அதுபோல காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ரம...

தேனியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்: முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நடந்தது

தேனி, நவ.23- தேனி மாவட்டம், வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு தலைமையில், தேனி மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் ஆகியோர் முன்னிலையில் 23.11.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச்  செயலாளர் பேசுகையில்,  தேனி மாவட்டம் இயற்கை எழில் மிகுந்த மாவட்டமாக திகழ்கிறது. எங்கெல்லாம் போதைப்பொருள் இல்லையோ அங்கே சண்டைகள், சச்சரவுகள், வாக்கு வாதங்கள் கலகங்கள் இருப்பதில்லை. அப்படிப்பட்ட உலகம்தான் புதியதோர் உலகமாக இருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர் வாழ்ந்த வாழ்க்கைக்கும், தற்போது நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.  நாம் யாருடன் சேர்கிறோம், யாரை உதாரண மனிதர்களாக வைத்திருக்கின்றோம், யாரை மேன்மையாக கருதுகின்றோம், எந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கின்றோம், எது நம்முடைய வாழ்க்கையின் முக்கியம் என்று நினைக்கின்றோம் என்பதை எல்லாம் வைத்துதான் நாம் வெ...

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

தேனி, நவ.22- தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆர்.வி.ஷஜீவனா 22.11.2024 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊன்றுகோல், மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆவாஸ் மென்பொருள் டேப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை (3.12.2024) முன்னிட்டு,  22.11.2024 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் ஓட்டப்போட்டி, நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மனவளர்ச்சி குன்றியவர்கள், பார்வைத்திறன் குறைபாடுடையவர், செவித்திறன் குறைபாடுடையவர், கை கால் பாதிக்கப்பட்டவர் என 350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி  மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் ந...

தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு -ஆண்டு விழா

தேனி, நவ.22- தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் 22.11.2024 அன்று "விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா" பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   இதில் விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  சுகுமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி இந்த கல்வியாண்டில் மாநில, மாவட்ட மற்றும் குறுவட்ட அளவில் சாதனை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பல்வேறு தடகள விளையாட்டு போட்டிகளும், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மின்சார வாரிய தேனி மேற்பார்வை பொறியாளர் லட்சுமி கலந்து கொண்டு கடந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தை பெற்...

தேனி மாவட்ட கோர்ட்டில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சிறப்பு புகைப்பட கண்காட்சி

தேனி, நவ.21- தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் 21.11.2024 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். சட்டம் சம்பந்தமான சந்தேகங்களுக்கும், அதனை தீர்ப்பதற்கும் மாநிலம் முழுவதும் இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. சட்டம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கு தெரியப்படுத்தவும், அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு முகாம் மற்றும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி இன்று நடைபெற்றது.  இந்நிகழ்வின் போது முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்ததாவது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல ஆண்டுகளாக சட்டம் சார்ந்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க...

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டம் நடத்த கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அனுமதி கோரி போலீசாரிடம் மனு

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள நகராட்சி பகுதி 5 சுகாதார மண்டலங்களாக பிரிக்கப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் நகராட்சியில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர்கள் பெரும்பாலானோர் ஓய்வு பெற்ற காரணத்தினால் தனியார் நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் தனியார் குப்பைகள் சேகரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக திறமையின்மையால் தேனி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு குப்பைகளம் போல் காட்சியளிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் தேனி போலீஸ் நிலையத்தில் போராட்ட நடத்த அனுமதி கோரி மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் தேனி அலங்காரம் நகராட்சி பகுதியில் துப்புரவு தூய்மை பணிகள் மிகவும் தெய்வாக இருப்பதாலும், இந்த குறைகள் பல மாதங்களாக இருப்பதாலும், நகராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாததாலும...

தேச நலன் காப்போம் என தேசிய கொடியுடன் நடைபயணம் செல்லும் உ.பி இளைஞர்: மதுரையில் உற்சாக வரவேற்பு

இந்திய தேசம் வலிமையுடன் முன்னேறவும்,இளைஞர்கள் வளம் பெற, தேச நலனுக்காக உத்திரப்பிரதேச மாநிலம், பதேபூர் கிராமத்தை சேர்ந்த  34வயதான சிவசேவாக் சிஷ்கரன் சிங், நாட்டின் மீது பற்று கொண்டவரான இவர் கடந்த 2009 ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடைபயணம் செய்து பல இடங்களில்  இளைஞர்களை சந்தித்து நல்ல கல்வி கற்று நம் நாடு வலிமை மிக்க  தேசமாக திகழ ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என பேசி நடை பயணம் சென்றார், இது அங்குள்ள மக்களிடையே வரவேற்பை பெற்றது,  இதனை தொடர்ந்து நாடு முழுவதும் நடை பயணம் சென்று தேச நலன் போற்று வோம் என்ற முழக்கத்துடன்  கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் நடை பயண யாத்திரை தொடங்கினார் இதில் முதலில் வடக்கே உத்திர பிரதேசத்தில் ஆரம்பித்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலம் வழியாக நடை பயணம் சென்று பின், பஞ்சாப், டெல்லி சென்று ஜம்மு காஷ்மீர் சீனா எல்லை பகுதி வரை நடந்து சென்று பாது காப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.  இதை தொடர்...

தேனியில் 71-வது கூட்டுறவு வார விழா: ரூ.10.47 கோடி மதிப்பிலான கடனுதவிகளை 1039 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார்

தேனி, நவ.18- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட என்.ஆர்.டி. மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 18.11.2024 அன்று நடைபெற்ற  71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ.10.47 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை 1039 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், கூட்டுறவுச் சங்கங்கள் மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து பெரும் பங்காற்றி வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள 119 கூட்டுறவு சங்கங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் மற்றும் பிற உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சியில்  பெரும் பங்காற்றி வருகிறது. 80 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 48 சங்கங்கள் இலாபகரமாக செயலாற்றி வருகிறது.  கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் அதிக அளவு இலாபகரமானதாக செயல்பட்டுள்ளது. மேலும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக புதித...

தேனி அருகே உள்ள மணி நகர் பூங்கா பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா: தேனி எம்.பி., துவக்கி வைத்தார்

தேனி, நவ.18- தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம்  ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதியில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா 18.11.2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேனி உதவி வனபாதுகாவலர் செசில் கில்பர்ட், தேனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மைதிலி (கிராம ஊராட்சி), ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் மற்றும் சுப்பிரமணி மணி நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது வேம்பு, புங்கை, பாதாம், பூவரசு, நாவல் ஆகிய 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேனி வனச்சரகர் சாந்தகுமார், வனவர் பாண்டியராஜன், வனகாவலர் வேலுச்சாமி ஆகியோர் செய்திருந்தனர். நாகராஜ், முதன்மை நிருப...

தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: தலைவர் எம்.சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது

தேனி, நவ.15- தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் எம்.சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணசாமி, பிரகாஷ், கந்தவேல், சங்கீதா, மாலா, கவிதா, தனலட்சுமி, நாகலட்சுமி, அன்புமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் கிருஷ்ணவேணி, உதவி பொறியாளர்கள் பிரகதீஸ்வரன், சுபா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 27 கூட்டப் பொருள் விவாதத்திற்கு வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு தலைவர் எம்.சக்கரவர்த்தி தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் முன் மாதிரியாக தேனி ஊராட்சி ஒன்றியக்குழு செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித கட்சி பாகுபாடும் இன்றி அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்து குறைபாடு இன்றி பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் நமது ஒன்றிய குழுவிற்கு கடைசி கூட்டமாக இருக்கும் என்று ஒன்றிய குழு தலைவர் எம்....

தேனி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 30 மனுக்களுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் தலைமையில் தீர்வு

தேனி, நவ.14- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் டாக்டர் கே.திருமலைமுத்து, ஐ.சி.எல்.எஸ். (ஓய்வு) அவர்கள் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 30 மனுக்களுக்கு இன்று (14.11.2024) தீர்வு காணப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலர் மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். அதேபோல, மனுதாரர் தனக்கு வழங்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லை என்று கருதினால் மேல்முறையீட்டு அலுவலரிடம் தகவலை கோரலாம். அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் மதுரை மற்றும் தேனி ஹாஜி கருத்த இராவுத்தர் ஹௌதியா கல்லூரி, இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) போன்ற பொது தகவல் அலுவலர்களிடம் அளிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட 30 மனுக்களுக்கு. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் டாக்டர் கே.திருமலைமுத்து. ஐ.சி.எல்.எஸ். (ஓய்வு) அவர்கள் தலைமையில் இன்று விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. நாகராஜ், முதன்மை நிருபர் 

தேனி நாடார் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

தேனி, நவ.14- தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 14.11.2024 வியாழக்கிழமை அன்று குழந்தைகள் தினவிழா  கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கினார்.  உறவின்முறை உபதலைவர் P.P. கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்  தேனி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் உதவி மேலாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை வித்யாலயா பள்ளி செயலாளர் V.நவமணி, இணைச்செயலாளர்கள் S.அய்யன் மூர்த்தி, L.G.S.தீபக்கணேஷ், பள்ளி முதல்வர் பூரண செல்வி, துணை முதல்வர் அனுஷா ஆகியோர் செய்திருந்தனர். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சார்பில் பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.  விழாவில் உறவின்முறை ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், உறவின்முறை சார்ந்த அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, ...

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு கூடுதல் பணம் வசூலித்து முறையான சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனை மீது தேனி கலெக்டரிடம் புகார்

  தேனி, நவ.11- தேனி மாவட்டம், வீரபாண்டி பைபாஸ் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லக்காமு என்பவர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில், நான் வீரபாண்டியில் வசித்து வருகிறேன். எனது தாய் பார்வதி அவர்களுக்கு சிறுநீரகக்கல் பிரச்சினைக்காக கம்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9.10.2024 அன்று அட்மிட் செய்தேன். அங்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர்களும் முற்றிலும், இலவசமாக அறுவை சிகிச்சை மற்றும் மற்ற அனைத்து இலவச சலுகைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதி அளித்தனர். அதன்படி கடந்த 10.10.2024 அன்று மாலை பார்வதி ஆகிய எனது தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைக்கு ரூ.31,100 அரசு வழங்கியது. ஆனால் அதை தவிர என்னிடம் மருத்துவமனை நிர்வாக ஊழியர் பிரியா என்பவர் ரூ.41,250-க்கு பில் தருவேன் என்று கூறி 3 தவணையாக கையில் ரொக்கமாக அந்த பணத்தை பெற்றுக்கொண்டார்.  அதன் பின்பு அறுவை சிகிச்சை மு...

சோழவந்தான், தென்கரை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீமூலநாத சுவாமி கோவிலில், முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவ விழா

மதுரை, நவ.8- மதுரை மாவட்டம், சோழவந்தான், வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள தென்கரை கிராமத்தில்  பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி திருக்கோவிலில் பிரதோஷ விழா கமிட்டியினர், மற்றும் முருக பக்தர்கள் சார்பில் 13.-ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் மற்றும் முருகபெருமானுக்கு திருக்கல்யாணம் உற்சவ விழா  நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து முருகன் பரஸ்சுரம் பாடல் துதிபாடி,  கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று  மாலை கோவில் முன்புறம் உள்ள இடத்தில் சூரபத்மனை வதம் செய்யும். சூரசம்ஹாரம் நிகழ்வு நடந்தது. முன்னதாக  அன்னை பராசக்தி தேவியிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்வும்.நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வணங்கினர், அதன் பின் சுவாமிக்கு தீபாராதனைகள் காட்டி விபூதி பிரசாதம் வழங்கினார்கள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து  திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் ,முருகபெருமான் வள்ளி  தெய்வானை  திருக்கல்யாண வைபவம் 8.11.2024 அ...

தேனியில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான குழந்தைகள் தினவிழா போட்டிகள்

தேனி, நவ.8- தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி காமராஜர் நகர் முத்துத்தேவன்பட்டி பள்ளியில் மாவட்ட அளவிலான குழந்தைகள் தினவிழா போட்டிகள் 8.11.2024 அன்று நடைபெற்றது. போட்டிக்கு தே.மே.இ.நா. உறவின்முறை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை  உபதலைவர் P.P.கணேஷ்,  பொதுச்செயலாளர்  M.M.ஆனந்தவ்,  பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சண்முகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  இந்த போட்டியில் தேனி  மாவட்டத்தில் உள்ள 23 பள்ளிகளை சேர்ந்த சுமார் 850 மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும், போட்டிகளில் பங்குபெற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் R.K.பாலசரவணக்குமார், இணைச்செயலாளர்கள் K.வன்னியராஜன், .D.அருண்குமார், பள்ளி மு...